Wednesday, December 23, 2009

பயணிகள் கவனத்திற்கு...!




வாரக்கடைசி நாள் விடுமுறைக்கு வீட்டுக்கு போயிட்டு வரலாம்னு நெனச்சி கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள்ள நுழைஞ்சதும் போர்க்களத்துல நுழைஞ்சது மாதிரி இருந்தது.

உள்ள நுழையிற ஒவ்வொரு பேருந்தையும் துரத்திகிட்டு ஓடுது ஒரு கும்பல். பேருந்து நின்னுதும் ஓடிப்போயி இருக்கிற ஒரேயெரு வாசலையும் அடைச்சிடுது. பேருந்தில இருந்து இறங்கறவங்க அந்த மக்கள் வெள்ளத்துமேல நீச்சல் அடிச்சித்தான் கரையை கடக்க முடியும்.

வாரம் 5 நாளும் 'வாங்க! வாங்க! டிக்கெட் கம்மிதான்.' ன்னு வழியனுப்ப வர்றவனையெல்லாம் கூட வாய்நிறைவா சொந்தக்காரன் மாதிரி பாசமா கூப்புடுற நடத்துனருங்க சனி ஞாயிறு மட்டும் 'சீட் இல்ல. அந்தாண்ட போ!' ன்னு பிச்சைக்காரனை தொரத்துரது மாதிரி தொரத்தியடிக்கிறானுங்க.

அப்படியும் படாதபாடுபட்டு ஒரு பேருந்துக்குள்ள ஏறி உட்கார்ந்ததும் பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருக்கிற மனுசனோட பனிப்போர் ஆரம்பிச்சிடுச்சி.

ரெண்டு சீட்டுக்கும் இடையில இருக்கிற கை வைக்கிற கட்டைக்கு ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிச்சிடுச்சி ரெண்டு பேருக்கும்.

அந்த ஆக்கிரமிப்புப்போர் வெட்டுகுத்துல முடிஞ்சதும் உண்டுன்னு என் நண்பன் எப்பவோ சொன்னது என் நினைவுக்கு வந்ததால சரி போய்த்தொலையட்டும் னு ஒருதலைப்பட்சமா போர்நிறுத்தம் அறிவிச்சு விட்டுக்கொடுத்துட்டேன்.

அடுத்தது அந்த மனுசன் 'பப்பரக்கா' ன்னு நல்லா காலை நீட்டி படுத்துகிட்டு குறட்டை விட ஆரம்பிச்சிட்டாரு. அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு கைக்குழந்தை மாதிரி என்னோட தோள்ல சாய ஆரம்பிச்சிட்டாரு. பல தடவை தூக்கி நிறுத்தியும் திரும்பத் திரும்ப சாய்ஞ்சுகிட்டே இருந்துச்சி அந்த சாய்ந்த கோபுரம். வேற வழியில்லாம நானும் அந்தாளு தலையில என்னோட தலைய முட்டுக்கொடுத்து தூங்க ஆரம்பிச்சிட்டேன்.

பேருந்து போய்க்கிட்டே இருந்துச்சு. திடீர்னு பயங்கரமான 'ங்கப்பு' மூக்கைத் துளைச்சி என்னோட தூக்கத்தை கலைச்சிடுச்சி.

என்னடான்னு கண்முழுச்சிப் பார்த்தா பேருந்து நடுக்காட்டுல ஓரமா நின்னுகிட்டு இருக்குது.

'பஸ்சு பத்து நிமிசம் நிக்கும். சாப்பிடுறவங்க சாப்புடுலாம்' ன்னு கொரலு கேட்குது.

வெளியில தலையை நீட்டி எட்டிப்பார்த்தா நடுக்காட்டுல நாலஞ்சு பேருந்து நிக்கிது ஒரு தகரகொட்டகை முன்னாடி.

கொட்டகையோட தலையில ஆளும் கட்சியோட கொடி பறக்குது. நாலு வருசத்துக்கு முன்னாடி அதே இடத்தில அப்ப ஆளும்கட்சியா இருந்து இப்ப எதிர்க்கட்சியா உள்ள கட்சியோட கொடி பறந்ததா எனக்கு ஞாபகம்.

ரொம்ப நேரமா ஆத்திரத்தோட 'அதை'யும் அடக்கிகிட்டு வந்த அப்பாவிப் பயணிங்க, பேருந்து நின்னதும் தன்னோட புலனடக்கத்தை கைவிட்டுட்டு திக்குக்கு நாலு பேரா பிரிஞ்சி ஒதுக்குப்புறம் தேடி ஓட ஆரம்பிச்சாங்க. அப்படி ஓடிப்போயி இறக்குமதிக்கு தயாரான பயணிகளை, நீளமான குச்சியை வெச்சிகிட்டு பயங்கரமான உருவத்தோட இருந்த ஒருத்தன்,

'யோவ் இங்க போவாதீங்கய்யா. ஓட்டல் பின்னாடி பாத்ரூம் இருக்கு. அங்க போங்கய்யா' ன்னு விரட்ட ஆரம்பிச்சான். இப்படி நாள்தோறும் அவசரத்துக்கு ஒதுங்கும் அப்பாவி சனங்களை விரட்டுறதுக்காகவே அவனுக்கு சம்பளம் போட்டு அங்க நிறுத்தி வெச்சிருக்கானுங்க போலிருக்கு.

பயணிகள் பல பேரு அவனோட அதட்டலுக்கு பயந்து பாரத்தை இறக்கி வைக்கும் முயற்சியை பாதியிலேயே கைவிட்டு உலகின் மிகவும் பயங்கரமான அந்த கழிவறையை நோக்கி ஓட ஆரம்பிச்சாங்க. விவரமான ஆசாமிங்க சில பேரு அந்த பிரதேசத்திலிருந்து தலைமறைவாகி பலமைல் தூரத்துக்கு நடைபயணம் செஞ்சு வெட்டவெளியில பாரத்தை இறக்கி வெச்சிட்டு திருப்தியோட திரும்பிவந்தாங்க.

ரொம்பநேரம் பக்கத்து சீட்டுக்காரனோட மண்டையிடிச்சண்டை போட்டு பாடி ரொம்ப டயர்டாயிடுச்சி. ரெண்டு தோசை தின்னுவெப்போம்னு அந்த ஓட்டல்ல நுழைஞ்சு நாற்காலியில குந்துனேன்.

சிக்குப்புடிச்ச தலைய சொறிஞ்சிகிட்டு என்கிட்ட வந்த ஒருத்தன், 'என்ன சார் சாப்புடிறீங்க?' ன்னு கேட்டுகிட்டே சட்டைக்குள்ள கைய விட்டான். மெனு கார்டு எடுக்கிறானோன்னு நெனைச்சேன். உள்ள கைய விட்டவன் அக்குளை சரட் புரட் டுன்னு சொறிய ஆரம்பிச்சிட்டான். பசி வந்தா பத்தும் பறந்து போகும்ங்கற பழமொழிக்கு மரியாதை கொடுத்து அவனோட சேட்டைகளை பொறுத்துகிட்டு 'ஒரு மசால் தோசை எடுத்திட்டு வாங்க' ன்னு சொல்லி அனுப்புனேன்.

இவனும் 'ஸ்பெஷல் மசால் தோச ஒண்ணு' ன்னு கத்திகிட்டே அடுப்பங்கரைக்கு போனான்.

கொஞ்சம் நேரம் கழிச்சு நசுங்கிப்போன ஒரு தட்டுல வெந்தும் வேகாம இருந்த ஒரு மசால் தோசைய எடுத்துகிட்டு வந்து எனக்கு போட்டு வெச்ச இலையில 'பொத்' துன்னு தூக்கி போட்டான். அப்புறம் சட்னி,சாம்பாருங்கிற பேருல சில ரசாயனக் கலவைகளை தோசை மீது ஊத்தினான். இருந்த பசிக்கு அதை தோசையோட குழப்பியடிச்சி சாப்பிட்ட உடனே என்னோட அடிவயித்தில சில ரசாயன மாற்றங்கள் நிகழ ஆரம்பிச்சிடுச்சி.

'சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல' ங்கற வாசகம் ஓட்டல் வாசலிலேயே எழுதியிருந்ததால, ஊருக்குப்போயி தீர்வுகாணலாம்னு முடிவு பண்ணி சாப்பிட்டு முடிச்சிட்டு,சர்வரை பில் எடுத்திட்டு வரச்சொன்னேன்.

சர்வர் ஒரு சில்வர் கிண்ணத்துல கசங்கின ஒரு சின்னத்தாளை வெச்சி எடுத்திட்டு வந்தான். சரி டிப்ஸ் எதிர்பார்க்கிறான் போலிருக்குன்னு முடிவு பண்ணி அதை எடுத்து தோசை விலையை பார்த்தவுடனே தலைசுத்த ஆரம்பிச்சிடுச்சி.

'என்னய்யா? ஒரு தோசை முப்பத்தி ஆறு ரூவாயா?'

'ஆமா சார். விலை கம்மிதான்' ன்னு சொல்லிட்டு கேவலமா இளிச்சான்.

ஐம்பது ரூபாய் தாளை எடுத்து அந்த கிண்ணத்துல வெச்சேன்.

போய் கல்லாவில உட்கார்ந்து இருந்த முதலாளி கிட்ட கொடுத்திட்டு அவருகிட்டேயே நின்னு ரொம்ப நேரமா பேசிகிட்டு இருந்தான்.

மீதி சில்லரை பதினாலு ரூபாயில நாலு ரூபாய் சில்லரையை அவனுக்கு டிப்ஸ் கொடுத்துட்டு மீதி பத்து ரூபாயில தோசை செரிக்கிறதுக்கு ஒரு கோக் சாப்பிடலாம்னு திட்டம் போட்டுகிட்டு நான் குந்தியிருந்தேன்.

அவன் முதலாளியோட ரொம்பநேரம் பேச்சுவார்த்தை நடத்திகிட்டேயிருந்ததால மறந்திட்டான் போலிருக்குன்னு நெனச்சி நானே நேரா கல்லாகிட்ட போய் நின்னு சர்வரை உத்துப் பார்த்தேன்.அவன் என்னை கண்டுக்கவே இல்லை. அப்புறம் தொண்டையைச் செருமி அவனோட கவனத்தை கவர நினைச்சேன். அந்த முயற்சியும் தோல்வியில முடிஞ்சது.அப்புறம் லொக்கு லொக்குன்னு இருமிப் பார்த்தேன். என்னை ஓரக்கண்ணால பார்த்தவன் திரும்பி நின்னுகிட்டு பேச்சை தொடர்ந்தான்.

வேற வழியில்லாம அவனோட தோளை தொட்டு,

'சர்வர். மீதி சில்லரை தர்றீங்களா?' ன்னு கேட்டவுடனே

'அதான் மீதி சில்லரை எல்லாத்தையும் டிப்ஸா எனக்கு குடுத்தியே சார்?' ன்னு என்னை முறைச்சான்.

'நியாயமா உங்க ஓட்டல் தோசையைத் தின்னதுக்காக நீங்கதாண்டா எனக்கு நிவாரணத்தொகையா டிப்ஸ் கொடுக்கணும்' னு ஆவேசமா கத்தினேன்(மனசுக்குள்ள.)

பரிமாறுனப்ப குழந்தை மாதிரி பிஞ்சு மூஞ்சியோட இருந்த அவனோட முகம் மீதி சில்லரை கேட்டவுடனே கொடூர குரங்கா கிராபிக்ஸ் உதவியில்லாமயே மாறினதைக் கண்டு மிரண்டுபோய் சத்தம்போடாம அந்த தகர கொட்டகையை விட்டு வெளியில வந்தேன்.

திரும்பிப் பார்க்காம பேருந்துக்குள்ள ஏறி உட்கார்ந்து கும்பகோணம் எப்படா வந்து சேரும்ங்கிற ஏக்கத்தோட ஒரு குட்டித் தூக்கம் போட ஆரம்பிச்சேன்.

பெருமூளை தூக்கத்தில இருக்கும்போது என்னோட சிறுமூளை சில சிந்தனைகளை சிதற விட்டிச்சு.

அதாகப்பட்டது,

நீண்டதூரம் பயணம் போகும்போது இடையில் சாப்பிடுவதற்கான உணவை கையோட எடுத்துகிட்டு போகணும்.

நடத்துனருகிட்ட ஏமாறாம இருக்க, சில்லரைகள் மாத்திவெச்சுக்கணும்.

ஐம்புலன்களையும் அடக்கத் தெரிஞ்சவங்க மட்டும் அந்தமாதிரி நடுக்காட்டில வழிப்பறி பண்ணும் இடங்கள்ல நிக்கும் பேருந்துல ஏறணும். மத்தவங்க இடைநில்லாப் பேருந்துல ஏறி பயணம் செய்து தன்னோட உயிரையும் உடைமைகளையும் காப்பாத்திக்கணும்.

இவைதான்ங்க தூக்க கலக்கத்தோட நான் கண்டுபிடிச்ச அந்த துக்ககரமான உண்மைகள்.

சரி நான் தூக்கத்தை கண்டினியூ பண்ணி மேலும் பல உண்மைகளை கண்டுபிடிச்சி உங்ககிட்ட அப்புறமா உளறுறேன்.இப்ப நான் தூங்கறேன்.கைப்புள்ள! இன்னும் ஏண்டா முழிச்சிகிட்டு இருக்க? தூங்ங்ங்......

கொர்ர்ர்ர்ர்ர்ர்........................................



.....

Wednesday, November 25, 2009

கனவு


..

என்றோ ஆழ்கடலில்
மூழ்கிப்போன காற்றின்துளி
இன்று மேலெழுந்து
கொப்பளிக்கும் நீர்க்குமிழி.

நாளை உதிக்கப்போகும்
ஆதவனின் முகம் காண...
இன்றே பூத்து நிற்கும்..
மனக்குளத்தில் தாமரைப் பூ.

...

Monday, November 23, 2009

2012 பேரழிவு : அரசியல் தலைவர்கள் அறிக்கை



மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்டஉலகின் கடைசி நாள்விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதைஜட்ஜ்மெண்ட் டேஎன்று பலரும் அஞ்சுகிறார்கள்.

(நன்றி : விக்கிபீடியா)

2012 திரைப்படம் மாயன் நாட்காட்டியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டாலும் உலக வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் பேரழிவினை நம் கண்முன்னே நிறுத்துகிறது.

சரி. உண்மையிலேயே 2012 ல் உலகம் அழியப்போவது உறுதியானால் நம்ம ஊரு அரசியல்வாதிகள் எப்படி அறிக்கை விடுவார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.



கருணாநிதி

அய்யகோ! இந்த பூமிப்பந்து அழியப்போவதுகண்டு நான் மனதுக்குள் புழுங்கியழுவது யாருக்காவது தெரிகிறதா? குறளோவியம் படைப்புகள் குப்பைமேட்டில் வீழ்வதா? பொன்னர் சங்கர் காவியங்கள் மண்அரித்துப்போவதா? கண்ணகிக்கு கடற்கரையில் நான் வைத்த சிலை விண்ணுயர முட்டும் அலைகளில் கண்மறைந்து போவதா? கழுத்தினிலே நான் அணியும் மஞ்சள் துண்டு அந்த பொழுதுனிலே நஞ்சிப்போக விடலாமோ உடன்பிறப்பே? என் செல்லக்குழந்தை அழகிரிக்கு மந்திரிப் பதவி கேட்டு தலைநகர் செல்வதற்கு உதவிய அந்த தள்ளுவண்டி வெள்ளக்காட்டிலே அடித்துக்கொண்டு செல்ல விடுவதா? தமிழினமே எழுந்து வா! கைகோர்த்து நிற்போம் கடற்கரைச்சாலையிலே மனிதச்சங்கிலியாய்! கோடானுகோடி தந்திகள் அடிப்போம் கொந்தளிக்கும் கடல்அலைக்கு கண்டனம் தெரிவித்து! மூட்டை மூட்டையாக கடிதங்கள் வரைவோம் உலகம் மூழ்கிப்போவதை தடுப்பதற்கு! தளபதி பின்னாலே அணிதிரள்வீர் தமிழர்களே!

ஜெயலலிதா

இந்தப் பேரழிவிற்கு காரணமான கருணாநிதியையும் தி.மு. மைனாரிடி அரசையும் வண்மையாகக் கண்டித்து நமது கழகத்தோழர்கள் எல்லா ஊர்களிலும் சந்துபொந்துகளிலும் வெயில் மழை பாராது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட உத்தரவிடுகிறேன். நான் மீண்டும் கொடநாடு எஸ்டேட் சென்று மேலும் ஆறு மாதங்கள் ஓய்வெடுத்து கருணாநிதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எவ்வாறு செய்வது என்று சிந்திக்க இருக்கிறேன் என்பதனையும் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாசு

இந்த சந்தர்ப்பத்திலாவது எங்களது வன்னியர் சாதியினர் வாழும் ஊர்களை தனியாகப் பிரித்து தனி தமிழ்நாடு உருவாக்கினால் நான் அந்த மாநில முதல்வராகவும் எனது மகன் அன்புமணி துணைமுதல்வராகவும் வரும் வேளையில் நாங்கள் காடுமரங்களை வெட்டித்தள்ளி நிலங்களை மேடாக்கி அதன்மேல் அமர்ந்து எங்கள் சாதியினர் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வார்கள். வாழ்க சாதிவெறி. வாழ்க தமிழ். வாழ்க இந்தியா. ஒழிக தமிழ்நாடு.

திருமாவளவன்

எரிமலைக்கு அடங்க மறுப்போம். சுனாமி அலைகளை அத்துமீறுவோம். மண்சரிவுகளிலிருந்து திமிறி எழுவோம். புயலடித்தால் திருப்பியடிப்போம். தலித்துகளுக்கென தனியான தீவு உருவாக்குவோம். வாழ்க தமிழ். ஒழிக ராஜபக்சே.

சுப்பிரமணியசாமி

2012 லே நடக்கப்போற இன்சிடென்டுக்கு எல்.டி.டி தான் காரணம். அவ்ங்களோட இந்த திட்டத்துக்கு ஹெல்ப் பண்றதா சோனியா காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையில ரகசிய ஒப்பந்தம் இருக்கிறதா ஒபாமா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. இது சம்பந்தமா நான் அடுத்தவாரம் சீனா அதிபரையும் ரஷ்யா பிரதமரையும் சந்திக்க இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்கோ. நான் பார்த்துக்கறேன். எல்லாரும் நன்னா வாழணும்ங்கிறதுக்காக எனது கட்சிக்காரா எட்டு கோடி பேரும் கருணாநிதிக்கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ணுவா. அதுக்காக நான் பி.ஜே.பி கூட கூட்டணி சம்பந்தமா பேசிண்டு இருக்கேன். காங்கிரசு சென்ட்ரல் கவர்மெண்டை அடுத்தவாரம் கலைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

....

Monday, November 16, 2009

இன்றைய செய்திகள் (16-12-2009)

செய்தி 1:

நிஜம்:

வாரிசு அரசியலை காங்கிரஸ் எதிர்க்கும் என இ.வி.கே.எஸ் இளங்கோவன் விழா ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.

நிழல் :

இப்படி கூறியதன் மூலம் காங்கிரஸை நிரந்தர குத்தகைக்கு எடுத்திருக்கும் நேரு குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வேதனை தெரிவித்தனர்.

செய்தி 2:

நிஜம்:

சாதி வாரியான கணப்பெடுப்பு உடனே நடத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாசு தெரிவித்தார்.

நிழல் :

மேலும், அரசு நடத்தும் கட்டணக் கழிவறைகளின் முன்னால் வரிசையில் நிற்பவர்களில் கூட தனது சாதியினருக்கு முன்னுரிமை அளித்து உள்ளே அனுமதிக்கவேண்டுமென வலியுறுத்தினார்.



செய்தி 3:

நிஜம் :

இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய நிதியமைச்சர் இலங்கையில் சந்தித்துப் பேசினார்.

நிழல் :

அப்போது,போரில் இலங்கைக்கு இந்தியா மிகப்பெரும் உதவிகள் செய்தும் தமிழர்கள் இன்னும் சிலரை மிச்சம் மீதி விட்டு வைத்திருப்பதற்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

செய்தி 4:

நிஜம் :

தர்மபுரி "கியூ' பிராஞ்ச் அலுவலகத்தில் நேற்று அதிகாலை, போலீசார் தங்களுடைய டாடா சுமோ வாகனங்களுக்கு, ஆட்டு கிடா வெட்டி திருஷ்டி பூஜை செய்தனர்.



நிழல் :

மேலும் 'மாமூல்' வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க அப்பாவிப் பலியாடுகள் பெருமளவில் சிக்குவதற்கு ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டனர்.

செய்தி 5:

நிஜம் :


புத்தமதத் தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசத்தில் தனது ஒருவார பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று டில்லி திரும்பினார்.


நிழல் :

தனது பயணத்தின் மூலம் இந்தியா, சீனா இடையே சிண்டுமுடிந்திடும் வேலை மிகச்சுலபமாக முடிந்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தார்

செய்தி 6:

நிஜம் :

தி.மு.க.வும், காங்கிரசும் இரண்டற கலந்து லட்சிய நோக்கத்தோடு செயல்படும் கட்சிகள். இரு கட்சிகளும் கூட்டாக இருந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியாவே வளமாகவும், வலிமையாகவும் இருக்கும் : கருணாநிதி பேச்சு.


நிழல் :

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருகட்சிகளும் கூட்டாக செயல்பட்டதன் மூலம் தங்களது லட்சிய நோக்கத்தினை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

...

Saturday, November 14, 2009

எங்க ஊரு அதிசய மனிதர்கள் - பாகம்2

புகழேந்திப்பயல்

புகழேந்திக்கு சொந்த ஊரு திருவையாறு பக்கத்தில இருக்கிற திருப்பூந்துருத்தி. கி.பி ஆயிரத்தி தொள்ளாயிரத்தி சொச்ச வருசத்துல அவன் எட்டாவது படிச்சிகிட்டு இருந்தப்ப அந்த ஊர்ல தாதாவா இருந்த காமராசு ங்கறவனுக்குப் பயந்து கிட்டு எங்க ஊருக்கு குடும்பத்தோட அகதியா வந்து சேர்ந்தான்.

நான் படிச்சிகிட்டு இருந்த பள்ளிக்கூடத்தில என்னோட வகுப்புல வந்து சேர்ந்தான்.

வந்த புதுசுல அந்தப்பய அமுக்குனியாட்டம் ரொம்ப சாதுவாத்தான் இருந்தான்.

ஒரு வாரம் கழிச்சு தன்னோட சுயரூபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு எதிர்கால லட்சியம் இருக்கும்.

அவனோட எதிர்கால லட்சியம் தமிழ் வாத்தியார் கபிலருக்கு பைத்தியம் பிடிக்க வெக்கணும் ங்கிறதுதான்.

" தமிழ் வாத்தியாருங்க எல்லாருமே காமெடி பீஸ் தான் " னு எப்பவும் அவன் சொல்லிகிட்டு இருப்பான்.

அதனால தன்னோட இலக்கா தமிழ் வாத்தியார் கபிலரை தேர்ந்தெடுத்தான்.

பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னாடி கபிலருக்கு டவுசர் போட்டுகிட்டு நிக்கிற குஷ்பு படம் போட்ட பொங்கல் வாழ்த்து அட்டையை தபால்ல அனுப்பி வெச்சிட்டான்.

கொதிச்சிப்போன தமிழ் வாத்தியாரு மறுநாள் காலையில நடந்த Prayer தன்னோட கடும் கண்டனத்தை தெரிவிச்சாரு.

" எந்த ராஸ்கல் தறுதலை முட்டாப்பயலோ எனக்கு இந்த பொங்கல் வாழ்த்தை அனுப்பி வெச்சிருக்கான் பாருங்க."

ன்னு சொல்லி அந்தப்பொங்கல் வாழ்த்து அட்டைய, உலகக்கோப்பை போட்டியில ஜெயிச்ச கபில்தேவ் கோப்பையத்தூக்கி காண்பிச்சது மாதிரி எல்லாருக்கும் காண்பிச்சாரு.

அதப்பார்த்த பசங்க எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.

" இவனுக்கெல்லாம் எப்படி படிப்பு வரும். வாழ்க்கையில உருப்படறதுக்கு வாய்ப்பே இல்ல. இதப்பத்தி திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்காருன்னா......" ன்னு பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டாரு.

ஒருநாளு தமிழ் இலக்கணம் பத்தி பாடம் நடத்திகிட்டு இருந்தாரு.

" 'பலப்பல' , 'சிலசில' மாதிரி பிரிஞ்சா பொருள் தர்ற வார்த்தைகள் அடுக்குத்தொடர். 'வழவழ' 'கொழகொழ' ன்னு பிரிச்சா பொருள்தராத வார்த்தைகள் இரட்டைக்கிளவிகள் ஆகும். டேய் புகழேந்தி! இரட்டைக்கிளவிகளுக்கு ஒரு உதாரணம் சொல்லு " ன்னு கேட்டாரு.

புகழேந்திப்பய பவ்யமா எழுந்திருச்சி கையை கட்டிக்கிட்டு,

" நீங்க பேசறது எல்லாமே இரட்டைக்கிளவிங்கதான் சார்."

" எப்படி சொல்ற? "

" நீங்க எப்பவுமே 'வளவள' ன்னு தேவையில்லாமத்தானே சார் பேசிகிட்டு இருக்கீங்க? "

இப்படி அவன் பதில் சொன்னதும் பசங்க எல்லாரும் 'கடகட' ன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

வாத்தியாருக்கு 'பொசபொச' ன்னு கோவம் வந்துடிச்சி.

உடனே குச்சிய எடுத்து புகழேந்திய 'படபட'ன்னு போட்டு வெளுத்து எடுத்துட்டாரு.

அடிதாங்க முடியாம அவன் 'பொலபொல' ன்னு கண்ணீர் விட ஆரம்பிச்சிட்டான்.

இப்படியா அவருக்கு பலப்பல சேட்டைகள் செஞ்சி அவரை தெனாலி படத்துல கமல் ஜெயராமை படுத்தி வெக்கிறது மாதிரி படாத பாடு படுத்தி வெச்சிகிட்டு இருந்தான்...

கொண்டு வந்து மனைப்புகுந்து
குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்திடை
வைத்தருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்திலாறு
சுவைத்திறத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில்
அமுது செய்ய அளித்துளார்.

பெரியபுராணத்துலயோ எதுலயோ வர்ற இந்த மாதிரி வாயில நுழையாத பாட்டையெல்லாம் கூட எளிமையா மனப்பாடம் பண்ணிடுவான். ஆனா கணக்குப் பாடம் னாலே இவனுக்கு ஒவ்வாமை.

"கணக்கு எனக்குப் பிணக்கு. நினைத்தாலே கசக்கும் ஆமணக்கு" ன்னு தத்துவம் பேசுவான். ஒண்ணும் மூணும் கூட்டினா ஏழு வரும்னு சொல்லுவான். அந்த அளவுக்கு கணக்குல ரொம்ப பலவீனமானவன்.

அதனால கணக்கு வாத்தியார் வகுப்புக்கு வரும்போது மட்டும் தலைமறைவாயிடுவான்.


தொடரும்....

....

Friday, November 6, 2009

டமில் ஒழிக !




ரெட் ஜெயன்ட் முவீஸ்

சன் பிக்சர்ஸ்

காமெடி டைம்

டீலா நோ டீலா

ஹாலிவுட் டைம்

SUN TV

K TV

SUN NEWS

SUN MUSIC

JAYA TV

JAYA PLUS

JAYA MAX


செம்மொழித் தமிழை எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார்கள் பாருங்களேன்!


தமிழ் இனி மெல்லச் சாகாது.இவர்கள் போகும் வேகத்தைப் பார்த்தால் சீக்கிரமாகவே செத்து விடும் போலிருக்கிறது.

அய்யோ! கொலை பண்றாங்கோ!! (தமிழை) கொலை பண்றாங்கோ! கொலை! கொலை!....



...

Wednesday, November 4, 2009

பொக்கிஷம் திருடின கந்தசாமி போல் ஒருவன்


என்னத்த எழுதறதுன்னு தெரியல. எழுதாம இருக்கவும் முடியல. கொஞ்ச நாளு எழுதாம விட்டுட்டா, இந்தப்பய எங்க போய்த்தொலைஞ்சான்னு யாரும் கவலைப்படறது இல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகவே கத்திக்கிட்டு இருந்த மத்த கட்சி மந்திரிகளையெல்லாம் கழட்டி விட்டுட்டு, பாசமிகு காங்கிரஸ் மந்திரிகளை மட்டும் கூட்டிக்கிட்டு இலங்கைக்கு ஜாலி டிரிப் அடிச்சிட்டு வந்த டி.ஆர்.பாலு அண்ணன், கனிமொழி அக்கா மாதிரிதான் இந்த பதிவுலக நண்பர்களும் போலிருக்கு. என்னத்தச் சொல்ல.

நான் என்ன பொக்கிஷம் படத்துல வர்ற சேரனா? இடைவெளியே இல்லாம இடைவேளை வரைக்கும் தொடர்ந்து எழுதிகிட்டு இருக்கிறதுக்கு.

அந்தப் படத்துலதான் நாற்பது வயசு இளம் கதாநாயகன் சேரன் தன்னோட காதலிக்கு மூணு மணி நேரமா மூச்சு விடாம காதல் கடிதம் எழுதித் தள்ளிகிட்டே இருந்து, கடைசியில மூச்சை விட்டுடுவாரு. ஆனா தியேட்டருக்கு படம் பார்க்க வந்த அப்பாவி மக்கள் படம் ஆரம்பிச்சு அரைமணி நேரத்திலேயே வாயால மூச்சு விட ஆரம்பிச்சிட்டாங்க. அதாகப்பட்டது, குறட்டை விட ஆரம்பிச்சிட்டாங்க.

கடல்ல மூழ்கும் கப்பலை கதையா வெச்சி வெளிவந்த டைட்டானிக் படத்தைப்போலவே ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு, தயாரிப்பாளரை கடன்ல மூழ்க வெச்சிட்டாரு பாவம்.

பணக்காரனுங்க கிட்ட இருக்கிற பணத்தைப் பிடுங்கி ஏழைமக்களுக்கு வாரி வழங்குற வள்ளல்கள் பத்தி ஏற்கனவே பலபேரு படமெடுத்து அவங்க பணக்காரங்களாயிட்டாங்க. பல படங்கள்ல பயன்படுத்தப்பட்டு கந்தையாகிப் போன அந்த கதையை வெச்சி 'கந்தசாமி' ன்னு விக்ரம் நடிச்ச ஒரு படம் வந்துச்சி.

படம் எடுக்க வீடியோ காமிரா பயன்படுத்தினாங்களா இல்ல ஸ்டில் காமிராவில போட்டோ புடிச்சி வரிசையா ஒட்டவெச்சிட்டாங்களான்னு தெரியல. ஓரு நிமிசத்துல ஓராயிரம் ஃபிரேம்கள் மாறுது. அதைப் பார்த்தா கண்ணுக்குக் கீழ கருவளையம் ஏறுது.

அந்தப் படத்தைக் காசு கொடுத்து பார்த்த ஏழை அப்பாவி மக்கள் தியேட்டரில் 'நொந்தசாமி' ஆனார்கள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன?

அப்புறம் 'உன்னைப்போல் ஒருவன்'ன்னு ஒரு படம்.

இந்தியில 'A Wednesday' ங்கற பெயரில வெளிவந்து வெற்றிகரமா ஓடுன படத்தை தமிழ்ல இந்தப் பேருல எடுத்திருக்காங்க.

காலையில எழுந்திருச்சி காய்கறி வாங்கப்போறேன்னு வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லிட்டு வெளியில கிளம்பி போற கதாநாயகன் கமல், ஒரு மொட்டை மாடிமேல ஏறி குத்தவெச்சி குந்திகிட்டு, ஊருக்குள்ள பல இடங்களில் வெடிகுண்டு வெச்சி இருக்கிறதா கமிசனர் மோகன்லாலுக்கு போன் பண்ணி அவருக்கு வயித்தால போவ வெக்கிறாரு.

'யோவ் என்னய்யா இப்படி சின்னப்புள்ளத்தனமா பண்ணிபுட்ட. எங்கங்க வெச்சிருக்கன்னு சொல்லுயா ங்கொய்யால.' ன்னு கமிசனரு காட்டமா கத்துறாரு.

'அதச்சொல்லணும்னா ஜெயில்ல இருக்கிற என்னோட தோஸ்துங்க நாலு பேரை வெளியில வுடுய்யா' ன்னு கமல் மிரட்டுறாரு.

'சரி. எங்கன அந்த நாதாரிப் பயலுங்கலை இட்டாந்து வுடனும்?' ன்னு கமிசனரு கேட்குறாரு.

'ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற பழைய விமான தளத்துக்கு இட்டாந்து வுடு. அங்க ஒரு ஜுப் நிக்கும். அதுல ஏறி அவனுங்களை உட்கார சொல்லிட்டு திரும்பிப்பார்க்காம நீ ஓடிப்போயிடு' ன்னு கமல் சொல்றாரு.

அவரு சொன்னமாதிரியே அந்த நாலு தடிப்பயலுங்களையும் ரெண்டு போலீசு காரனுங்க தறதறன்னு இழுத்துட்டுப்போயி அந்த விமான தளத்துக்குள்ள தொறத்தி விடறாங்க. அந்த கேடிப்பயலுங்க சந்தோசமா ஓடிப்போயி அந்த ஜுப் உள்ள ஏறி உட்கார்ந்துகிட்டு பாட்டு கேட்குறதுக்காக பிளேயரை ஆன் பண்ணுறானுங்க.

உடனே பிளேயரில ' துன்பம் தொலைந்தது இப்போ' ன்னு பாட்டு கேட்குது. அடுத்த நொடி படார்னு வெடிச்சி சிதறுது.

'என்னய்யா இப்படி பண்ணிபுட்ட?. உண்மையில நீ யாருய்யா?'ன்னு கமிசனரு கமல் கிட்ட கேட்க,

கமல்
'உன்ன மாதிரித்தான்யா நானும். நீ மட்டும் உனக்குப் பிடிக்காத ரவுடிங்களை எண்கவுண்டர்ல சுட்டுத்தள்ளுறயில்ல?. ஒரு அப்பாவி மனுசன் எனக்கு மட்டும் அந்த உரிமையில்லையா? நான் என்ன இளிச்சவாயனா. போங்கய்யா. போய் புள்ளகுட்டிங்களை படிக்க வையிங்கய்யா. சும்மா பிக்காரித்தனமா பேசிகிட்டு!'

ன்னு போனை கட் பண்ணிட்டு காய்கறி மூட்டையத் தூக்கி தலையில வெச்சிகிட்டு மொட்டைமாடியை விட்டு இறங்கி வீட்டுக்கு நடையக் கட்டுறாரு.

படம் பார்த்துட்டு வெளியில வர்ற சனங்களும் 'நல்ல யோசனையா இருக்கே. நாமளும் இப்படி எங்கயாவது குண்டு வெச்சிட்டு போலீசை மிரட்டலாமா' ன்னு சிந்திச்சபடியே வீட்டுக்கு நடையக் கட்டுறாங்க.

மூக்குப்பொடி வாங்குறமாதிரி வெடிமருந்தை எப்படி கமல் சர்வசாதாரணமா வாங்குறாருன்னு தெரியல. அப்புறம் அந்த வெடிமருந்து விக்கிற கேடிப்பயலை மட்டும் ஏன் மன்னிச்சி விடறாரு. அவனையும் எண்கவுண்டர் பண்ணச் சொல்லியிருக்கலாமே?

இத மாதிரி பல சந்தேகங்கள் உங்களைப்போலவே எனக்கும் வருது. ஏன்னா நானும் 'உங்களைப் போல் ஒருவன்' தானே!

.....

Monday, August 31, 2009

கோமதி பாட்டியின் காசி யாத்திரை




கோமதி பாட்டி சோப்புத்தண்ணீரில் ஊறிக் கொண்டிருந்த தனது பல்செட்டை எடுத்து வாயில் மாட்டிக்கொண்டாள்.

வெற்றிலைப் பெட்டியின் உள்ளே மல்லாக்கப்படுத்து ஹாயாக உறங்கிக் கொண்டிருந்த வெற்றிலையாரை எடுத்து தனது உள்ளங்கையில் குப்புற படுக்க வைத்தாள் கோமதிபாட்டி.

தூக்கம் கலைந்து லேசாக கண்விழித்துப் பார்த்தார் வெற்றிலையார். கோமதி பாட்டி பாசமாக வெற்றிலையாரின் முதுகினை வருடி, மேலே ஒட்டியிருந்த தூசியை துடைத்து விட்டாள். பாசமாக வருடியதில் லயித்துப்போன வெற்றிலையார் மீண்டும் அயர்ந்து தூங்க ஆரம்பித்தார்.

பின்னர் சுண்ணாம்பு டப்பியில் இருந்து தனது ஆட்காட்டி விரலில் சிறிதளவு சுண்ணாம்பினை எடுத்து அதனை வெற்றிலையாரின் முதுகில் பரவலாக தடவிவிட்டாள்.

சுண்ணாம்பு பட்ட எரிச்சலில் அதிர்ச்சியாகி தூக்கம் கலைந்து வெற்றிலையார் சுதாரிப்பதற்குள் கோமதிபாட்டி அவரது காம்பு வாலை தனது விரலால் நறுக்கி தூர எறிந்தாள். வலியில் அலறித்துடித்த வெற்றிலையார் எழ முயற்சிக்கும்போது அவரின் முதுகில் பாக்குப் பாறைகளை கொட்டி, சிறிது சீவல் குப்பைகளையும் அள்ளித்தெளித்து அமுக்கினாள். வெற்றிலையார் கதறக் கதற அவரது உடலை இரண்டு, நான்கு, எட்டு மடிப்புகளாக மடித்து தனது பல்செட்டின் கடைவாய்ப்பகுதியில் வைத்து கடித்துக் குதறி கொன்றாள். சத்தத்தின் டெசிபல் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் வெற்றிலையாரின் மரண ஓலம் அவளது வாய்க்குள்ளேயே அடங்கிப்போனது.

வெற்றிலையாரின் செங்குருதி மட்டும் அவளது கடைவாய் வழியாக வழிந்து தரையை நனைத்துக்கொண்டிருந்தது.

கோமதி பாட்டியும் அபிராமி கிழவியும் இணைபிரியா உடன்பிறந்த சகோதரிகள்.

'பளபள' வென இருக்கும் பல்செட்டை மாட்டிக்கொண்டு 'கொழகொழ' வென வாயில் வெற்றிலைபாக்கு மென்றுகொண்டு 'வழவழ' வென எப்போதும் பேசிக்கொண்டு காலம் தள்ளும் இந்த இரட்டைக்கிழவிகளை ஒருபோதும் பிரிந்து பார்க்கவே முடியாது.

ஆனால் காலம் அவர்களை இப்போது பிரிய வைத்துவிட்டது.

அதாகப்பட்டது, கோமதிப்பாட்டி காசியாத்திரை போவதென்று முடிவெடுத்து விட்டாள்.

அவள் காசியாத்திரை போவதற்கு காரணம் புண்ணியம் தேடி அல்ல. தனது தொல்லை தாங்காமல் இருபது வருடத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போன தனது கணவன் புண்ணியகோடியைத் தேடி.

(அறுபது வருடங்களுக்கு முன்.......(ஃப்ளாஷ்பேக்))

கோமதிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

'அம்மா. எனக்கு நீங்க யாரும் மாப்பிள்ளை பார்க்க வேணாம். எனக்கு நானே பார்த்துக்கிறேன்.'

'ஏண்டி இப்படி சொல்லுற?'

'அம்மா. நான் ஒரு லட்சியத்தோட இருக்கேன். எனக்கு கோடீஸ்வரன் மாப்பிள்ளை வேண்டாம். ஒரு அன்னாடம் காய்ச்சியை கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம்.'

அம்மா கடுப்பாகி 'எக்கேடோ கெட்டுத்தொலை' என்று திட்டிவிட்டு அடுப்பங்கரைக்குச் சென்றுவிட்டாள்.

கோமதி தனது சகோதரி அபிராமியை உடன் அழைத்துக்கொண்டு தனது 'லட்சியப்புருசனை' தேடி தெருத்தெருவாக அலைந்து திரிந்தாள்.

ஒருநாள் தனது லட்சியப்புருசனை தெருக்கோடியில் கண்டெடுத்தாள்.

சிக்குப்பிடித்த தலையுடனும் வயிறு வரை தாடியுடனும் 'ஙங ஙங' என்று தலையை சொறிந்தபடி ஒருவன் தெருக்கோடியின் பிளாட்பாரத்தில் உருண்டு கிடந்தான்.

அவனை நெருங்கிய கோமதி அவனை எழுப்பிவிட்டாள்.

'என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?'

'கல்யாணம் பண்ணிகிட்டா தினமும் எனக்கு சோறு போடுவீங்களா' என்று அவன் திருப்பிக்கேட்டான்.

'கண்டிப்பா போடுவேன் அத்தான்' என்றாள் கோமதி.

ஒரு குண்டான் பழைய சோற்றினை ஒரே வாயில் தின்றதுபோல் அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.


திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் முதல் வேளையாக அவனது கெட்டப்பை மாற்ற விரும்பினாள் கோமதி.

தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் துருப்பிடித்துக்கிடந்த புல்வெட்டும் கத்தரிக்கோலை கொண்டுவந்து, புண்ணியகோடியை உட்கார வைத்து அவனது தலையில் வளர்ந்திருந்த அடர்ந்த புதரினை வெட்ட ஆரம்பித்தாள்.

அந்நேரம் அவனது தலையில் 'பேன்கள் மாநாடு' நடந்துகொண்டிருந்தது. மேடையில் பேன்களின் தலைவர் பேசிக்கொண்டிருக்க ஆயிரக்கணக்கான பேன்கள் மேடைமுன்பு அமர்ந்து அவரது பேச்சினைக் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

'நண்பர்களே! இந்த மனிதப்பயல்கள்தான் தலையில் அழுக்கினை ஸ்டாக் வைத்து நமது இனத்தினை உருவாக்குகிறார்கள். பின்னர் ஏன் நாம் வளர்ந்த பிறகு சீயக்காய்,ஷாம்பு போன்றவற்றினை தடவிக்குளித்து நம் இனத்தினை அழிக்கின்றனர்?

இவ்வளவு தீங்குகள் செய்தாலும் நாம் அவர்களுக்கு நன்மைகள்தானே செய்கிறோம். அதாவது அவர்கள் அடிக்கடி அயர்ந்து தூங்கி பொழுதினைப்போக்கி சோம்பேறிகளாக மாறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நாம் அவர்களது மண்டையினை கடித்துக்குதறி அவர்களை தூங்கவிடாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறோம்.இதுகூட புரிய வில்லையா இந்த மரமண்டைகளுக்கு?. ஆனால் நாம் குடியிருக்கும் இந்த தலைக்குச் சொந்தக்காரன் புண்ணியகோடி மிகவும் நல்லவன். இதுவரை பல வருடங்களாக தனது தலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட படாமல் நம்மை பாதுகாக்கிறான்.எனவே புண்ணியகோடி வாழ்க! வாழ்க! சீயக்காய், ஷாம்பு ஒழிக! ஒழிக!' என கோஷமிட்டார்.


திடீரென ஓர் ஆயுதம் தனது இருப்பிடத்தினை தாக்கி அழிப்பதனை கண்ட பேன்கள் கூட்டம், அலறியடித்தபடி சிதறியோடினர்.

'ஆ! ஆபத்து! இவ்வளவு காலம் நமது இனத்தினை பாதுகாத்து வந்த புண்ணியகோடியா இப்படி செய்வது?'

'தலைவா! இது புண்ணியகோடியின் செயல் அல்ல. அவனது புதுப்பெண்டாட்டி கோமதியின் சதிச்செயல்'

'ஆ! அப்படியா! ஒற்றர்படை வீரனே! உடனே நீ ஓடோடிச்சென்று அந்த கோமதியின் தலையில் வாழும் நமது இனத்தவரிடம் சென்று அவள் தலைமீது தாக்குதல் நடத்துவதற்கு கட்டளையிட்டுவிட்டு வா!'

ஒற்றர்படை வீரன் வேகவேகமாக ஓடோடிச்சென்று கத்தரிக்கோல் வழியாக கோமதியின் கையில் ஏறி பாஸ்போர்ட், வீசா எதுவுமின்றி அண்டை நாடான கோமதியின் மண்டையினை வந்தடைந்தான்.

அங்கு அசதியில் தூங்கிக்கொண்டிருந்த பேன்கள் கூட்டத்தினை எழுப்பி நடந்ததை விளக்கினான்.

கோபமடைந்த பேன்கள் கூட்டம் தங்களது ஆயதங்களாகிய வாயினால் கோமதியின் உச்சந்தலையில் கடித்துக்குதறி ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தினர்.

அரிப்பு தாங்கமுடியாமல் கோமதி புண்ணியகோடியின் புதர் மண்டிய தலையினை சீர்திருத்தும் பணியினை கைவிட்டுவிட்டு தனது இரண்டு கைகளினாலும் தனது உச்சந்தலையினை 'வரட் சரட்' டென்று சொறிய ஆரம்பித்தாள்.

பின்னர், பாசமிகுதியினால் தனது கணவனுக்கு எப்போதும் சுடச்சுட பூரி, இட்லி,தோசை, பிரியாணி வகைகளை சமைத்துப்போட்டாலும் அவை எதுவுமே அவனுக்கு பிடிக்காமல் போனது. குண்டான் நிறைய பழையசோறு சாப்பிட வேண்டும் என்று ஒருநாள் அடம்பிடித்தான் புண்ணியகோடி.

கோபமடைந்த கோமதி அவனை தரதரவென இழுத்துப்போட்டு தூக்கிப்போட்டு மிதித்து சுளுக்கெடுத்தாள்.

வலி தாங்கமுடியாமலும் பழையசோறு திங்கவேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையினை நிறைவேற்றிக்கொள்ளவும் ஒருநாள் வீட்டை விட்டு ஓடிப்போனான் புண்ணியகோடி.

(ஃப்ளாஷ்பேக் முடிந்தது.)


பல்செட் மாட்டிக்கொண்டு, சீடையினை தின்றுகொண்டு கோமதி கிழவி தொலைக்காட்சியினை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது 'நான் கடவுள்' படத்தின் பாடல் காட்சி ஒன்று ஒளிபரப்பானது.

அதில் காசியில், கங்கையாற்றின் படித்துறையில் கதாநாயகன் ஆர்யா ஒரு சாமியாரை தூக்கிப்போட்டு மிதித்து பிறகு பறந்துபோய் அவனது தொந்தியின் மேல் 'நங்' கென்று சம்மணமிட்டு அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

கீழே கிடந்த அந்த சாமியார் அச்சு அசல் புண்ணியகோடி போல இருந்தான்.

மகிழ்ச்சியில் திளைத்தாள் கோமதி பாட்டி.

'அடியேய் அபிராமி! உன்னோட அத்தான், அதான் என்னோட கணவர் காசியிலதாண்டி இருக்கிறாரு. அவரை எப்படியாவது கண்டுபிடிச்சி பழையசோறு கொடுத்து சமாதானம் பண்ணி ஊருக்கு கூட்டிகிட்டுவந்துடறேன். நீ வீட்டை பத்திரமா பார்த்துக்க. நான் போய்ட்டு வர்றேன்.'

என்று மறக்காமல் ஒரு தூக்குச்சட்டி நிறைய பழையசோற்றினை அள்ளி அமுக்கிக்கொண்டு தனது கணவனைத்தேடி காசிக்குப் புறப்பட்டாள் கோமதி பாட்டி.


Urik in Gomti copputtannir grandmother who took her palcettai ensnared in the mouth. betel box ah மல்லாக்கப்படுத்து inside his palms down on the bed and placed the sleeping komatipatti verrilaiyarai. kanvilittup looked slightly disheveled verrilaiyar sleep. Gomati scanner backs of verrilaiyar affectionate grandmother, has wiped the dust attached to the top. Affectionate varutiyat the layittuppona verrilaiyar again overwhelmed sleep began. then lime Duffy from his index finger slightly cunnampinai take the verrilaiyar backs widely tatavivittal. lime was angered shocked sleep dispersed verrilaiyar cutarippatarkul komatipatti his stem tail with his finger cut threw. He has pain in the back while trying to get up in the alarittutitta verrilaiyar pakkup poured rocks, a little slice allittelittu suppress garbage. His body is screaming katarak verrilaiyar two, four, eight folds of the pleated kataivayppakuti put his palcet kutari killing bite. Noise decibel level was so low was verrilaiyar death agony of her vaykkulleye atankipponatu. verrilaiyar's cenkuruti only her kataivay via the overflows floor நனைத்துக்கொண்டிருந்தது. Gomati grandmother Apirami old inseparable siblings sisters. 'palapala' vena the palcettai caught 'kolakola' vena gate verrilaipa the menrukontu 'valavala' vena ever This can be seen pushing time talking irattaikkilavikalai never separated., but time has made ​​them to leave now. atakappattatu, komatippatti kaciyattirai decided not to go. kaciyattirai go because she is not looking good fortune. Shocked by his troublesome twenty years ago fled the house in search of her husband punniyakotiyait.(sixty years ago ....... (flashback)) Gomati began to see the groom in the house. 'mother.You do not want anyone to see my son. I take care of myself. ' "enti this mean? ' "mother. I am a latciyattota. I do not groom millionaire. A annatam distilled married பண்ணிக்கணும்ங்கிறதுதான் my life's ambition. ' mother katuppaki 'ekketo kettuttolai he shouted அடுப்பங்கரைக்குச் past. Gomati his sister Abhirami with calling her 'latciyappurucanai' search terutteru wandered. someday his latciyappurucanai terukkoti found on. cikkuppititta talaiyutanum stomach until tatiyutanum 'nana nana "The head corintapati one terukkoti the platform rolls lying. him close Gomati he has created. 'me marry pannikkirinkala?' "marriage pannikitta everyday I cook potuvinkala" he திருப்பிக்கேட்டான்."Sure I'll cousin, 'said Gomti. , a gangster old corrinai same gate tinratupe he துள்ளிக்குதித்தான் in joy. marriage. marriage after the first time and wanted to change his bad Gomati. துருப்பிடித்துக்கிடந்த lawn in the backyard of his home and brought kattarikkolai, punniyakotiyai sit up and developed in his head and began to cut thick putarinai. busy in his head "lice Conference 'happening. Thousands of head lice lice metaimunpu sat talking on the platform listening to his speech were cheered with applause.'guys! Keep this மனிதப்பயல்கள்தான் head stack alukkinai make our ethnicity. Why then, after we developed soapnut, shampoo etc. tatavikkulittu destroying our ethnicity?nanmaikaltane so much harm we are doing to them. This means that they often become overwhelmed and lazy sleeping பொழுதினைப்போக்கி their mantaiyinai katittukkutari in good faith, we do not understand them வைக்கிறோம்.இதுகூட tunkavitamal always run active for the maramantaikal ?. But we have been drinking this talaikkuc punniyakoti owner is very nice. For far too many years without even a drop of water on his head punniyakoti பாதுகாக்கிறான்.எனவே us life! Hail! Soapnut, shampoo Down! Down! ' The crowd chanted.suddenly struck by a weapon from cutting its location, the lice meeting, alariyatittapati scattering. 'Ah! Danger! Punniyakotiya protecting our ethnicity do this for so long? ' "Boss!It's not punniyakoti. Conspiracy of his putuppentatti Gomti ' 'Ah! Really! Orrarpatai virane!Immediately pledges the Gomati's head, living in our community, who went to her head and attack கட்டளையிட்டுவிட்டு come! ' orrarpatai champ rapid pledges scissors along the Gomati's hand climbed the passport, visa, without the neighboring Gomati's mantaiyinai arrived. , where tired and sleeping in his lice session riser explained what had. angered lice meeting their ayatankalakiya mouth Gomati's scalp katittukkutari rage attacked. itching unbearable Gomati punniyakoti of bushy, the head of reforming the process, abandoning his two hands on his scalp, "Let's string 'tenru scratch started. later, pacamikutiyin her husband always hot puri, idli, dosa, biryani dishes சமைத்துப்போட்டாலும் None of them I hate him.One would have to eat a lot of thugs demanding punniyakoti palaiyacoru. angered him Gomati tarataravena iluttuppottu tukkippottu culukketuttal trampled. painful tankamutiyamalum his longtime desire to fulfill one of palaiyacoru tinkaventum punniyakoti ran away from home. (flashback ended.) palcet coat, citaiyinai tinrukontu Gomati old woman watching television. then 'I am God' song being aired. including Kashi, Ganga Ghat of the hero Arya a Saamiya tukkippottu trampled and then parantupoy his tonti the top of the 'Da' kenru cammanamittu seated meditation began. Below lay the priest original print punniyakoti was like. joy exuded Gomati grandmother . 'atiyey Apirami! Your cousin, my husband kaciyilatanti irukkiraru adhan. Kantupiticci somehow made ​​peace with him palaiyacoru கூட்டிகிட்டுவந்துடறேன் to town. You have to take care of the house properly.I Goodbye. " Remember that a lot of tukkuccatti palaiyacorrinai amukkikkontu bestowed his kanavanaitteti kacikkup Gomati grandmother was going. ...


...

Tuesday, July 14, 2009

நில்..கவனி..சாப்பிடு!



காலையில் அலுவலகம் புறப்படுவதற்காக அவசர அவசரமாக சாப்பிட அமரும்போதுதான்,

'உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கா? சீதபேதியா? காலராவாக இருக்கலாம். உடனே ஒரு தேக்கரண்டி உப்புடன் ஆறு தேக்கரண்டி சர்க்கரையை கரைத்துக்கொடுங்கள்.'என்று தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பாகும்.

மதியம் சாப்பிட அமரும் நேரத்தில்,

'உங்களுக்கு இருமலா? சளியுடன் ரத்தமும் வருகிறதா? தொடர்ந்து காய்ச்சலா? காசநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனே அருகிலுள்ள சுகாதார மையத்தினை அணுகுவீர்!' என பாசமுடன் ஆலோசனை வழங்குவார்கள்.

இரவு நேரம் டின்னராவது நிம்மதியாக சாப்பிடலாம் என்றால் அப்போதுதான் விளம்பரத்தில்,குளோசப் காட்சிகளில் டாய்லெட்டை காண்பித்தபடி டாய்லெட் கழுவும் பாட்டிலை எப்படி உபயோகிப்பது என்று செய்முறை விளக்கம் அளிப்பார்கள்.

இப்படியாக எது எதற்கோ காசு செலவு செய்து விளம்பரம் செய்கிறார்கள்.


இந்த மக்களுக்கு 'பொது இடங்களில் நாகரீகமாக சாப்பிடுவது எப்படி?' என்று விளம்பரம் செய்தால் நல்லாயிருக்கும்.


'பந்திக்கு முந்திக்கொள்' என்று நம் முன்னோர்கள் பழமொழி கூறினார்களே தவிர 'பந்தியில் நாகரீகமாக சாப்பிடு' என்று ஏனோ கூற மறந்து விட்டனர்.

சாப்பிடுவதில் ஒவ்வொருவரும் ஒரு ரகம்.

ஒரு சிலர் சாதத்தினை கொத்தாக கையெறிகுண்டு போல உருட்டி அண்டைநாட்டின் மீது வீசுவது போல கோபமாக தொண்டைக்குழியை நோக்கி வீசி தாக்குதல் நடத்துவார்கள். வீசப்பட்ட கொத்துக்குண்டானது வாயின் பக்கவாட்டுச்சுவற்றில் மோதி சிதறி தொண்டைக்குழிக்குள் விழுந்து காணாமல் போகும்.உடனே அடுத்த கொத்துகுண்டினை தன் கைப்பட உருவாக்கி அடுத்த தாக்குதலை தொடங்குவார்கள்.

பாசமிகுதியால் சிலர் தனது குழந்தையை பள்ளியின் வாசல் வரை வந்து விட்டுவிட்டு திருப்தியுடன் வீட்டிற்கு திரும்பிச்செல்வார்கள்.

அதுபோல ஒரு சிலர், சாதத்தினை உள்ளங்கையில் அள்ளி அதனை தனது அய்ந்து விரல்களையும் உள்நாக்கு வரை உள்ளே விட்டு வழியனுப்பிவிட்டு திருப்தியுடன் கைவிரல்களை வாய்ச்சிறையிலிருந்து விடுதலை செய்வார்கள்.

ஒரு சிலர் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் சாதத்தினை எடுத்து வாயின் வாயிலாகிய உதட்டிலேயே வைத்து கூரியர் அனுப்பி விட்டு அவசரமாக திரும்பி விடுவர். வாயானது அந்த உணவினை உள்ளே அனுப்புவதற்காக இரண்டு உதடுகளையும் முத்தம் கொடுப்பது போல குவித்து, மூஞ்சியினை கூம்பு வடிவத்தில் அஷ்டகோணலாக மாற்றி உணவுடன் காற்றினையும் சேர்த்து, 'ஊவ்வ்வ்வ்வ்வ்வ்ஸ்ஸ்' என்ற நாராசமான சத்தத்துடன் உள்ளிழுத்துக்கொள்ளும்.

கைவிரல் நகம் வரைமட்டுமே உணவு படும்படி நாசூக்காக சாப்பிடுபவர்களும் உண்டு.
உள்ளங்கையிலிருந்து முழங்கை வரை சாம்பார்,காரக்குழம்பு,ரசம்,பாயசம்,மோர் ஆகிய ஐந்தருவிகளும் வழிந்து ஓடும்படி சாப்பிடுபவர்களும் உண்டு.

திருமணம்,ஓட்டல் போன்ற பொது இடங்களில் சாப்பிடும்போது ஒருசிலர்,

'எனக்கு ரெண்டு நாளா வயிறு சரியில்ல. கடமுடான்னு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு. வாந்தி வர்றது மாதிரியும் இருக்கு.வாய்வுத்தொந்தரவும் இருக்கு' என்று பேசி அருகில் ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை வாந்தியெடுக்க வைத்துவிடுவார்கள்.

இன்னும்சிலர் எதுவும் பேசாமல் செய்கைகளாலேயே, அதாவது சாப்பிடும்போது காது குடைவது,மூக்கு குடைவது தலையை வரட், வரட்டென்று சொறிவது, 'ஏவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்;....'என்று மிக நீளமாக பக்கத்து ஊருக்கு கேட்கும் வகையில் ஏப்பம் விடுவது போன்ற செயல்களை செய்து பக்கத்தில் சாப்பிடுபவரை பாதியில் பதறியோட வைப்பர்.

ஒரு சிலர் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து விட்டு, சாப்பிட்ட இலையினை சுத்தம் செய்யும் பணியினை நிதானமாக தொடங்குவர். தனது ஆட்காட்டி விரலினால் அங்குலம் அங்குலமாக வழித்து, விரலை நக்கி நக்கி சுத்தம் செய்து, பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்தாலும் ஒரு பிசிறு கூட உணவுத்துகள் கண்ணில் சிக்காத அளவிற்கு இலை சுத்தமான திருப்தியுடன் அரைமணி நேரம் கழித்தே இலையினை அடக்கம் செய்வர்.

இன்னும் சிலர், நுனிப்புல் மேயும் மாடுபோல எல்லா உணவு வகைகளிலும் பாதி மிச்சம் வைத்து விட்டு இலையினை மூடி வைக்காமலே எழுந்து சென்று விடுவர். போர்க்களம் போல் காட்சியளிக்கும் அந்த இலையினை தப்பித்தவறி பக்கத்திலிருப்பவர் பார்த்து விட்டால் அருவருப்பில் தனது இலையினையும் மூடி வைத்துவிட்டு ஓடி விடுவார்.

திருமண வீட்டில் சாப்பிடுபவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

முதல் வகையினர், நிதானமாக ஆட்டத்தினை சாம்பாரில் தொடங்கி, அதிரடியாக பாயசம் வரை வந்து ரன் குவித்து விட்டு, மேற்கொண்டு சாப்பிட முடியாமல் வயிறாகிய கம்பெனியானது 'No Vacancy' போர்டினை வாசலில் தொங்கவிட்டு விடுவதால் 99 ரன்னில் அவுட்டாகும் டெண்டுல்கர் போல, மோர் சாதம் சாப்பிட முடியாமல் பந்தியினை விட்டு சோகமாக வெளியேறுவர்.

இரண்டாவது வகையினர் டிராவிட் ரகம். பந்தியினை தொடங்கியதும் கொஞ்சம் சாம்பார்சாதம், கொஞ்சம் ரசம் சாதம் என்று நிதானமாக ஆட்டத்தினை தொடங்கி, வெற்றிகரமாக மோர் சாதம் வரை வந்துவிடுவார்கள். நேரம்தான் வீணாகுமே தவிர கொஞ்சமாக மட்டுமே சாப்பிட்டு இருப்பதால் பசி அடங்காது. எனவே அடுத்த பந்தியாகிய ஓவரிலும் தனது ஆட்டத்தினை சாம்பார் சாதமாகிய முதல் பந்திலிருந்து மீண்டும் தொடங்குவர். இப்படியாக பரிமாறுபவராகிய நடுவர் பந்தியாகிய மைதானத்திலிருந்து விரட்டிவிடும்வரை தனது ஆட்டத்தினை அவுட் ஆகாமல் தொடர்ந்து கொண்டேயிருப்பர்.


எனவே, இதைப்படித்துக்கொண்டிருக்கும் எனது அருமை தமிழ்மக்களே! எனது இந்த கட்டுரையை நகல் எடுத்து இனி உங்கள் வீட்டில் நடக்கும் வீட்டு விசேஷங்களுக்கு சாப்பிட வரும் நபர்களுக்கு இலவசமாக விநியோகிக்கவும்.அதைப்படித்து முடித்தவுடன் வந்தவர்களை வரிசையில் நிற்க வைத்து இந்த கட்டுரையிலிருந்து சில கேள்விகள் கேளுங்கள். அந்த பரிட்சையில் வெற்றிபெறும் நபர்களை மட்டும் பந்தியில் சாப்பிட அனுமதியுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் எதிர்கால நாகரீக சாப்பாட்டு ராமன்களை உருவாக்கிய பெருமை உங்களைச் சேரும்.

இன்னும் நிறைய உங்களிடம் சொல்லணும்னு தோணுது. ஆனா லேசா பசிக்கிற மாதிரி இருக்குது. இருங்க. சாப்பிட்டுட்டு வந்து உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.அப்ப நான் வர்ட்ட்டா.... வணக்கம்.

Friday, July 10, 2009

வாழ்க்கை




கரையிலிருந்து..

நீரில் விழுந்து..

நெடும் பயணம் தொடங்கியது. – மீண்டும்

கரை ஒதுங்கும் இடம்தேடி-

ஓர் ஒற்றை இலை.

.

நகரத்துச் சொர்க்கம் : நங்கநல்லூர்




நங்கநல்லூர்!

சென்னை என்ற பரந்து விரிந்த பாலைவனத்தில் ஓர் அதிசய அமைதிப்பூங்கா.

மொட்டைமாடியில் நின்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் தென்னை மரங்களின் பசுமை.

விடியற்காலையில் கேட்கும் பூஜை மணியோசைகள்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளிவரும் சாம்பிராணி புகை மண்டலத்தில் கரைந்துபோகும் மனதின் அழுத்தங்கள்.

மாலை நேரங்களில் கேட்கும் மனதை மயக்கும் சங்கீத கீர்த்தனைகள்.

நேர்த்தியான சாலைகளில் நிதானமாக பயணிக்கும் வாகனங்கள்.

வறுமையின் எச்சத்தினைக்கூட காணாத வளம் மிக்க மனிதர்கள்.

32 அடி உயர ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயம், நங்கநல்லூரின் அடையாளச்சின்னம்.

தென்னைமர உயர ஆஞ்சநேயரை தரிசிக்க வரும் பக்தர்கள் பலர்; தொன்னையில் வைத்துக் கொடுக்கப்படும் சுவையான பிரசாதத்திற்காக வரும் பக்தர்கள் சிலர் என்று எப்போதும் கூட்டத்தினால் நிரம்பி வழியும் அந்த ஆலயம்.

கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளுமே அந்த ஊரில் குடிகொண்டுள்ளன.

நள்ளிரவின் அமைதியில் தெருக்களில் அச்சமின்றி நடைபயிலும் தம்பதிகளை அங்கே காண முடியும்.

இத்தனையும் மீறி,

'என் பையன் அமெரிக்காவிலே சாப்ட்வேர் இஞ்சினியரா ஒர்க் பண்றான். கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கேயே செட்டில் ஆயிட்டான். மாசா மாசம் எங்க செலவுக்கு பணம் அனுப்பிடுவான். தினமும் சாட்டிங்ல என் பேரப்பிள்ளை கிட்ட பேசினாத்தான் எனக்கு தூக்கமே வரும்'

என்று பெருமையாகச் சொல்லும் சில வயதான பெற்றோரின் தனிமை வாழ்க்கை என் மனதை நெருடுகிறது.

.

விகடனில் எனது படைப்பு

'சாமி குத்தம்' -சிறுகதை

என்ற தலைப்பில் என்னுடைய படைப்பு விகடன்.காம் – ல் 09-07-2009 வியாழக்கிழமை அன்று வெளிவந்துள்ளது.

விகடனுக்கு நன்றி!

http://youthful.vikatan.com/youth/manipayalstory09072009.asp

Wednesday, July 8, 2009

சாமி குத்தம் - சிறுகதை


கத்தியின் கூர்முனை அந்த நள்ளிரவின் கருமையிலும் மின்னியது.

அந்தக்கத்தியை தன்னுடைய இடுப்பில் எடுத்து செருகிக்கொண்டான் அறிவழகன்.


'நாளைக்கு இந்நேரம் நாம என்ன நிலையில் இருப்போம்னு யாருக்கும் தெரியாது. ஆனால் இத செஞ்சுத்தான் ஆகணும். வேற வழியில்லை' என்றான் கவியரசு.

'நாம எவ்வளவு சொல்லியும் காது கொடுத்து கூட கேட்க மாட்டேனுட்டானுங்க.அவனுங்களுக்கு புத்தி புகட்டினாத்தான் நாம இந்த ஊர்ல இனிமே மனுசனா இருக்கலாம்' பற்களை நறநறவென கடித்தான் மேகநாதன்.

...........................................................................................................

அன்று மாலை ஊர் மத்தியில் நடந்த ஊர்ப்பொதுக்கூட்டத்தில் அறிவழகன் அமைதியாகத்தான் சொன்னான்.

'அய்யா! பெரியவங்க எல்லாரும் இங்க இருக்கீங்க. உங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. ஒவ்வொரு வருசமும் நடக்கிற அம்மன் தேரோட்டம் எல்லாத் தெருவுக்கும் போகுது. ஆனா பல வருசமா எங்க மேலத்தெருவுக்கு மட்டும் வர்றதில்ல. காரணம் கேட்டா அது அந்த காலத்திலேயிருந்து வர்ற நடைமுறைன்னு சொல்றீங்க. ஆனா அது உண்மையில்லைங்க. அந்த காலத்துல எங்க தெரு ரொம்ப குறுகலா இருந்துச்சு. அதனால தேர் உள்ள வரமுடியல. ஆனா இப்பத்தான் அரசாங்கத்துல நல்ல அகலமா சாலை போட்டு கொடுத்து இருக்காங்க. அதனால இந்த வருசம் அம்மன் தேரோட்டம் எங்க தெருவுக்கும் வரணும்னு எங்க தெரு சனங்க ஆசைப்படுறாங்க. நீங்க பெரியவங்கதான் நல்ல முடிவு சொல்லணும்'

உடனே தெட்சிணாமூர்த்தி கோபமாக எழுந்தார்

'என்னப்பா! புதுசா பிரச்சினையை கௌப்பலாம்ணு வந்திருக்கியா?. உங்க தெரு வழியா எந்த வருசமும் அம்மன் போனதில்லை. அப்படி வரச்சொல்லி உங்கத்தெருவுல இருக்கிற பெரியவங்க யாரும் இதுவரைக்கும் எங்க கிட்ட கேட்டதும் இல்ல. இப்ப நீ வந்து புதுசா இந்தப்பிரச்சினையை கிளப்பாதே. போகாத தெருவுக்கு அம்மன் போனா சாமி குத்தமாயிடும். அப்புறம் ஊருக்கு ஏதாவது கெடுதி நடந்தா என்ன பண்றது? கொஞ்சம் படிச்சிட்டாலே புத்தி கோணலாயிடும் போலிருக்கு.'

'அய்யா! சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்தானுங்களே. இந்தப்பூமியை படைச்ச சாமிக்கு அந்தப்பூமியில இருக்கிற எங்க தெரு மட்டும் எப்படிங்க பிடிக்காம போகும்?. நீங்க இப்படி பண்றதால எங்க தெரு சனங்கள மத்த தெரு சனங்க ஏதோ நாயைப் பார்க்கிறது மாதிரி கேவலமா பார்க்கிறாங்க.ரொம்ப அவமானமா இருக்குங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க.'

'இதப்பாரு தம்பி! நீ எங்களுக்கு அறிவுரை சொல்லாத. என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். நீ சொல்ற படியெல்லாம் நாங்க செய்ய முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க. முதல்ல கூட்டத்த விட்டு வெளியே போ.'

அவமானப்பட்டவனாக திரும்பினான் அறிவழகன்.

...........................................................................................................

'சரி. நாளைக்கு என்ன பண்ணனும்னு இன்னும் ஒரு தடவை சொல்றேன். எல்லாரும் கவனமா கேட்டுக்கங்க.
நாளைக்கு அந்தி நேரத்துலதான் அந்த அம்மன் தேர் நம்ம தெரு முனைக்கு பக்கத்தில வரும். அந்த நேரத்தில நாம ஆறு பேரும் திடீர்னு கத்தி அருவாளோட கூட்டத்துல நுழையணும். அங்க நின்னுகிட்டு இருக்கிற ஊர் நாட்டாமை கல்யாணசுந்தரம் கழுத்தில கத்தியை வெச்சிட்டு தேரை நம்ம தெருவுக்கு திருப்பச்சொல்லி மிரட்டணும். தேர் நல்லபடியா நம்ம தெருவை சுத்தி வந்ததும் நாம அங்கிருந்து போய் போலீசுல சரணடையனும். என்ன தண்டனை கிடைக்குதோ அதை நம்ம தெரு சனங்க நலனுக்காக நாம ஏத்துக்குவோம்.'

எல்லோரும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தனர்.

...........................................................................................................

மறுநாள் அம்மன் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.

ஊரில் அனைத்து தெருக்களையும் சுற்றிவந்தபின் மேலத்தெரு முனைக்கு அருகிலிருந்த புதுத்தெருவுக்குள் நுழைய ஆரம்பித்தது.

திடீரென கூட்டத்தில் ஊடுறுவிய அறிவழகனும் அவனது நண்பர்களும் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்து தேர் முன்பாக நடந்து வந்துகொண்டிருந்த ஊர் நாட்டாமை கல்யாணசுந்தரத்தின் கழுத்தில் வைத்து அழுத்தினர்.

'டேய்! யாராவது கிட்ட வந்தீங்கன்னா உங்க நாட்டாமை பொணமாயிடுவாரு. மரியாதையா தேரை மேலத்தெரு பக்கம் திருப்புங்கடா!' என்று கோபமாக கத்தினான் அறிவழகன்.

தேர் மேலத்தெரு பக்கமாக திரும்ப ஆரம்பித்தது.

அப்போது திடீரென கூட்டத்திலிருந்து நான்கைந்து போலிஸார் துப்பாக்கிகளுடன் அறிவழகனையும் அவனது நண்பர்களையும் சுற்றி வளைத்தனர்.

'டேய்! மரியாதையா நாட்டாமையை விட்டுட்டு சரண்டர் ஆயிடுங்க. இல்லைன்னா, நாயைச் சுடுறது மாதிரி சுட்டு சாகடிச்சிடுவேன்.'

அறிவழகனும் அவனது நண்பர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கைகளைத்தூக்கியபடி போலீசாரிடம் சரணடைந்தனர். உடனே ஊர்மக்கள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தனர். உடம்பில் ரத்தம் வழிய அவர்களை போலீசார் தரதரவென இழுத்துச்சென்றனர்.

'நீங்க இப்படி ஒரு திட்டம் போட்டு இருக்கீங்கன்னு எனக்கு காலையிலேயே உங்க தெருக்காரன் ஒருத்தன் சொல்லிட்டான்டா. உங்களை இப்படி கையும் களவுமா பிடிக்கணும்னுதான் போலீஸ்ல புகார் கொடுத்திட்டு காத்துகிட்டு இருந்தேன். என் கழுத்திலயா கத்தி வெக்கறீங்க? ஜெயில்ல கிடந்து சாவுங்கடா!' என்று கோபமுடன் உருமினார் நாட்டாமை கல்யாணசுந்தரம்.

'நல்லவேளை! எங்க, அவனுங்க திட்டப்படி தேரு அந்தத்தெருவுக்குள்ள போயி சாமி குத்தத்துக்கு ஆளாயிமோன்னு பயந்துகிட்டே இருந்தேன். அந்த மாரியாத்தா நம்மளையெல்லாம் காப்பாத்திட்டா.'என்று பரவசமுடன் அம்மனை பார்த்து வணங்கினார் தேரின் மேல் அமர்ந்திருந்த பூசாரி கோபாலசாமி.

'சரி சரி! தேரை புதுத்தெருபக்கம் திருப்புங்கப்பா'என்று கூட்டத்தினை விரட்டினார் தெட்சிணாமூர்த்தி.

தேர் மேலத்தெரு முனையிலிருந்து புதுத்தெரு நோக்கி நகர ஆரம்பித்தது.

திடீரென பயங்கர சத்தத்துடன் தேரின் அச்சாணி முறிந்து தேர் ஒருபக்கமாக சாய்ந்தது. தேரின் மேல் அமர்ந்திருந்த பூசாரி,தேரிலிருந்து கீழேவிழுந்து தேருக்கு அடியில் நசுங்கினார். தேரிலிருந்து விடுபட்ட வேகத்தில் சக்கரமானது அருகில் நின்றுகொண்டிருந்து நாட்டாமை கல்யாணசுந்தரத்தின் மீது மோதி தூக்கி எறிந்துவிட்டு வேகமாக ஓடி, மேலத்தெருவுக்குள் நுழைந்து அறிவழகனின் குடிசை வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்து அடங்கியது.


சாய்ந்து கிடந்த தேரின் மேல் இருந்த அம்மன், முன்பைவிட மேலும் உக்கிரமாகக் காட்சியளித்தாள்.

..........................................................................................................

Thursday, July 2, 2009

இன்றைய செய்திகள் (02-01-2009)

செய்தி 1

***************************


செய்தி 2

நிஜம் :

'அரசியலுக்கு வந்துவிட்ட பின் மீண்டும் சினிமாவில் நடிக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒருவர் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்ய முடியாது' என பிரஜா ராஜ்ஜியம் கட்சித்தலைவர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

நிழல் :

சிரஞ்சீவியின் இந்த கருத்து தவறானது என்றும், முயற்சி செய்தால் கதாநாயகியுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்ட கையோடு, மேக்கப் கலையாமல் சட்டமன்றத்திற்கும் சென்று வரமுடியும் என்றும் நடிகர்களும் கட்சித்தலைவர்களுமான விஜயகாந்தும்,சரத்குமாரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.




செய்தி 3

நிஜம்:

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து, நாட்டின் பாதுகாப்ப சம்பந்தப்பட்டதாக உள்ளது. எனவே இத்திட்டம் நிறைவேறும் சாத்தியக்கூறுகள் குறைவு என மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் பேட்டி அளித்தார்.

நிழல் :

அதாவது இத்திட்டம் இலங்கை நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்றும் அதனாலேயே இலங்கையை பாதுகாப்பதற்காக இத்திட்டத்தினை கிடப்பில் போட்டு விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி 4

நிஜம்:

சிங்களர்களுக்கு கோபம் ஏற்படும் செயல்களில் ஈடுபடாமல் நீக்குபோக்குடன் நடந்து கொள்ளவேண்டும் என சட்டசபையில் கருணாநிதி தெரிவித்தார்.

நிழல்:

முடிந்தால், சிங்களர்கள் அசதியாக இருக்கும் சமயத்தில் அவர்களது கால்களை அமுக்கி விடுவது, அவர்களுக்கு வியர்த்தால் விசிறியால் விசிறி விடுவது போன்ற பணிவிடைகள் செய்து சிங்களர்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தமிழர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், இன்னும் ஒரு சில நூற்றாண்டுகளுக்குள் வணங்காமண் கப்பல் நிவாரண பொருட்களை ஈழத்தமிழர்களிடம் கொண்டு சேர்க்க மத்திய அரசு விரைவாக செயல்பட்டு வருவதாகவும் அதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தாம் ஒரு சாக்கு மூட்டை நிறைய பல கடிதங்களை எழுதி ஆ.ராசா மூலம் கொடுத்து அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.




செய்தி 5

நிஜம்:

பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு ருபாயும், டீசல் விலை இரண்டு ருபாயும் உயர்த்தப்பட்டது.

நிழல் :

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, கடந்த பாராளுமன்ற தேர்தல் செலவுகளுக்காக தமது கட்சிக்கு நிதி வழங்கிய ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு நன்றிக் கடனாக இந்த விலையேற்றத்தை செய்ய வேண்டிய கடமை காங்கிரசுக்கு உள்ளது என தெரிவித்தார்.



செய்தி 6

நிஜம் :

சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை மையத்தை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

நிழல் :

நிகழ்ச்சியில் பேசிய ப.சி, அடுத்ததாக தமிழக மீனவ பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கை கடற்படை அப்பாவி வீரர்களைப் பாதுகாப்பதற்காக கடல் நடுவில் 'இலங்கை பாதுகாப்பு படை மையம்' ஒன்று விரைவில் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.




செய்தி 7

நிஜம் :

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தாம் முழுப்பொறுப்பு ஏற்பதாகவும் அதற்காக தூக்குமேடை ஏறவும் தயாராக இருப்பதாகவும் பாரதீய ஜனசக்தி கட்சித் தலைவர் உமாபாரதி அறிவித்தார்.

நிழல் :

மேலும், இனி எங்காவது கட்டிடங்கள் இடிக்கும் பணி இருந்தால் கான்ட்ராக்ட் முறையில் விரைவாகவும்,குறைந்த செலவிலும் தமது கட்சியினரால் இடித்துத் தரப்படும் என்றும் அவர் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்.


.

Wednesday, July 1, 2009

இன்றைய செய்திகள் (01-07-2009)

செய்தி 1:

நிஜம்:

'இலங்கைத் தமிழரைக் காப்பாற்று!' என சட்டசபையில் அ.தி.மு.க ச.ம.உ க்கள் கோஷமிட்டதால் வெளியேற்றப்பட்டனர்.

நிழல் :

'போர் நடந்தால் அப்பாவிப் பொதுமக்கள் சாவது சகஜம்தான்' என்று சகஜமாக அறிக்கை விட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசுக்கு 'பக்கபலமாக' இருந்த ஜெயலலிதாவை அவரது கட்சி ச.ம.உ க்கள் இவ்வாறு கோஷமிட்டு அவமானப் படுத்தி விட்டதாக காங்கிரஸ் ச.ம.உ க்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.



செய்தி 2:

நிஜம்:

மும்பை பாந்த்ரா – ஓர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப் பாலத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார்.

நிழல் :

இனி வரும் காலங்களில் கடல் வழியாக ஊடுறும் போது, அந்தப்பாலத்தினை பயன்படுத்துவது பற்றி பரசீலிக்கப்படும் என பாகிஸ்தான் தீவிரவாதிகள் அறிவித்தனர்.



செய்தி 3:

நிஜம் :

போலீசாருக்கு வருமானம் தரும் இடங்களாக சிறைச்சாலைகள் இருக்கின்றன என்று அ.தி.முக ச.ம.உ எஸ்.வி.சேகர் சட்டசபையில் கூறினார்.

நிழல் :

இது பற்றி கருத்து தெரிவித்த காவல்துறை உயரதிகாரி ஒருவர், எஸ்.வி.சேகர் குறுகிய கண்ணோட்டத்துடன் இக்கருத்தினை கூறியுள்ளதாகவும், உண்மையில் அனைத்து இடங்களுமே தங்களுக்கு வருமானம் தரும் இடங்கள்தான் என்றும் தெரிவித்தார்.



செய்தி 5:

நிஜம் :

தற்போது இந்திய வெளியுறவு செயலாளராக பதவி வகித்து வரும் சிவசங்கர் மேனனின் பதவி காலம் வருகிற 31 – ஆம் முடிவடைவதால், புதிய வெளியுறவு செயலாளராக நிருபமா ராவ் நியமிக்கப் பட்டுள்ளார்.

நிழல் :

இது பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சிவசங்கர் மேனன் தனது பதவிக்காலத்திலேயே இலங்கையில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப்பேரின் வாழ்க்கைப் பிரச்சினையை 'முடித்து' விட்ட மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.



செய்தி 6:

நிஜம் :

இந்தியாவின் முக்கிய நகரங்களில் மாநகர போலீசாருக்கு ஹெலிகாப்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நிழல் :

போலீசார் இனி விரைவாக மாமுல் வசூல் செய்ய வசதியாகவே இந்த வசதி செய்துதரப்பட இருப்பதாக அவர் மேலும் கூறினார்.


.

Tuesday, June 30, 2009

இன்றைய செய்திகள் (30-06-2009)

செய்தி 1:

நிழல் :

பறவைகளின் மேல் அன்பும் பாசமும் கொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி அவர்கள் பறவைகள் பயன்படுத்துவதற்காக 1000 கோடி ருபாய் செலவில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே டாய்லெட் வசதி செய்து கொடுத்துள்ளார்.

நிஜம் :

அதாவது, உ.பி முதல்வர் மாயாவதி 1000 கோடி ருபாய் அரசுப்பணத்தில் மாநிலம் முழுவதும் தனது சிலைகளை நிறுவி பறவைகளின் 'பயன்'பாட்டிற்காக அவற்றைத் திறந்து வைத்தார்.



செய்தி 2:

நிஜம் :

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன், விசாரணை அறிக்கையை இன்று (30-06-2009) தாக்கல் செய்தது. 48 முறை கமிசன் தனது விசாரணை காலத்தை நீட்டித்து, 17 வருடங்களுக்குப்பிறகு அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது.

நிழல் :

அதைத்தொடர்ந்து, இன்னும் 170 ஆண்டுகளுக்குள் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் உயிருடனோ பிணமாகவோ ஆவியாகவோ நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.



செய்தி 3:

நிஜம் :

தமிழ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தி தருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நிழல் :

தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு விமானங்களிலும் போர்க் கப்பலிலும் போர் நடந்த சமயத்தில் அனுப்பிய ஏராளமான நிவாரண 'பொருட்களை' இலங்கை ராணுவம் சரிவர பயன்படுத்தாததாலேயே மீதம் இத்தனை லட்சம் தமிழர்கள் தப்பிப் பிழைத்து விட்டதாகவும், இந்தியாவினால் கொடுக்கப்பட்ட பயிற்சிகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் சரியாக பயன்படுத்தியிருந்தால் தற்போது அகதிகள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

அதே நேரத்தில், தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து கொடுத்துவரும் 'விருந்து உபசாரங்களுக்காக' அந்நாட்டு அதிபர் ராசபக்சேவுக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.



செய்தி 4:

நிஜம் :

சென்னை மாநகராட்சியிலுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் இனிமேல் கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டால் மாநகராட்சி மன்றத்தையே கலைத்துவிடுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

நிழல் :

அல்லது, தவறு செய்யும் தி.மு.க கவுன்சிலர்களின் பதவிகளைப் பறித்து அந்தப்பதவிகளை தனது பேரன் பேத்திகள் மற்றும் கொள்ளு பேரன்களுக்கு கொடுப்பதற்கான சட்டம் ஒன்றினை இயற்ற முடிவெடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



செய்தி 5:

நிஜம்:

தீவிரவாதிகளுடன் இனி பேச்சு வார்த்தை நடத்தப்போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்தார்.

நிழல் :

இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் பணியினை தீவிரவாதிகள் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் அதன் காரணமாகவே அவர்கள் மீது தான் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டினார்.


.

Friday, June 26, 2009

போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்!






பம்மல் கே சம்பந்தம் படத்துல கமல் கல்யாணம் ங்கற வார்த்தையைக் கேட்டாலே 'உவ்வே' ன்னு எதுக்கு குமட்டிக்கிட்டு வாந்தி எடுத்தார்னு ஒருநாள் மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்து சிந்தனை பண்ணிப்பார்த்தேன்.

கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் னு இந்த கெழங்கட்டையெல்லாம் அடிக்கடி சொல்லுதுங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட நெலமையோ ஒரு வாரத்து தயிர் மாதிரி ரொம்ப நாறிப்போயிடுதுங்க.

அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மாதிரி கலகலப்பாய் போய்க்கிட்டு இருக்கிற பிரம்மச்சாரியோட வாழ்க்கை கல்யாணத்துக்கு அப்புறம் மெகாதொடர் சீரியல் மாதிரி ஒரே சோகமாயிடுதுங்க.

'வீட்டைக் கட்டிப்பாரு. கல்யாணம் பண்ணிப்பாரு.' ன்ற பழமொழியை அனுபவிச்சி முதல்ல சொன்னவன் என்ன பாடுபட்டிருப்பான்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.

கல்யாணம் பண்றதுக்குள்ள எத்தனை சடங்கு, சம்பிரதாயம்!

முதல்ல பொண்ணு தேடுற படலம்.

கேசரி,ஜாங்கிரி இப்படிப்பட்ட இனிப்புப் பண்டங்களுக்கு அடிமையான பசங்களை நண்பனா கூட்டிக்கிட்டு பொண்ணு பார்க்கப்போறவன் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ண முடியாது. பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சிப்போயி இருந்தாலும் பொண்ணு தேடுற படலம் முடிஞ்சு போயிடுச்சின்னா அப்புறம் திங்கிறதுக்கு சுவீட் கிடைக்காதேங்கற பதட்டத்துல ஏதாவது குறையைக் கிளப்பி விட்டுட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு 'அப்புறம் சொல்லி அனுப்புறோம்' னு கிளம்ப வெச்சிடுவானுங்க.

பொண்ணு நல்லா லட்சணமா இருந்தாலும் அடுத்தபடியா திங்கறதுக்கு பட்சணம் கிடைக்காதேங்கற எண்ணத்துல மாப்பிள்ளைக்காரப் பயல் கிட்ட 'டேய்! பொண்ணோட மூக்கு அருவா மாதிரி வளைஞ்சு இருக்குடா' ன்னு உசுப்பேத்தி விட்டுட்டு அந்த பொண்ணை பிடிக்கலன்னு சொல்ல வெச்சிடுவானுங்க.

சுவீட் முட்டை போடுற வாத்தை யாராவது கொல்ல நினைப்பாங்களா?.

இப்படி அடுத்தவனுக்குப் பொண்ணு பார்க்கப் போயே தன்னோட சுவீட் தாகத்தை தீர்த்துக்குவானுங்க.

ஒருவழியா நண்பர்களோட சதித்திட்டங்களையும் முறியடிச்சிட்டு பொண்ணு புடிச்சிப்போயிடுச்சின்னா அடுத்ததா நிச்சயதார்த்தம்னு ஒண்ணு பண்ணுவாங்க.

தட்டுல பழம், வெத்தலை பாக்கு இதெல்லாம் வெச்சி பொண்ணோட அப்பனும் மாப்பிளையோட அப்பனும் மாத்தி மாத்தி கொடுத்துக்குவானுங்க. என்னய்யா விளையாடறீங்களா?

அவங்க அவங்க வாங்குன ஆரஞ்சுப் பழத்தை அவனவன் உரிச்சித் தின்னுக்க வேண்டியதுதானே? எதுக்கு வாங்குன பழத்தை மாத்தி மாத்தி கொடுத்துக்கணும்?. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

நிச்சயதார்த்தமும் முடிஞ்சி அப்புறம் கண்ணாலம்.

கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி மாப்பிள்ளை நேரா ஊர்ல இருக்கிற ஏதாவது ஒரு பியூட்டி பார்லருக்குப்போயி ஷேவ் பண்ணி முடி வெட்டிக்குவான். பியூட்டி பார்லர் காரன் மாப்பிள்ளை கிட்ட 'ஃபேசியல் பண்ணிக்குங்க. அப்பத்தான் நாளைக்கு மூஞ்சி பளபளன்னு இருக்கும்' னு சொல்லி உசுப்பேத்தி விடுவான். கருவாப் பயலாட்டம் இருக்கிற நம்ம மாப்பிள்ளைப் பயலோட மூஞ்சியில சேறு மாதிரி எதையோ குழப்பி அப்பிவிட்டு காய வைப்பான்.காய்ஞ்சுகிட்டு இருக்கிற அந்த கொஞ்ச நேரத்துல நம்ம மாப்பிள்ளைப்பய கண்ணை மூடிக்கிட்டு கற்பனையில காஷ்மீர் மாதிரி குளுகுளு பிரதேசத்துக்கு பறந்துபோயி அந்த பொண்ணு கூட ஒரு குத்தாட்டம் போட்டு முடிச்சிடுவான். அரை மணிநேரம் கழிச்சி மூஞ்சிய கழுவிப்பார்த்தா கரிச்சட்டியில சுண்ணாம்பு அடிச்சது மாதிரி மூஞ்சி வெள்ளையா இருக்கும்.

கல்யாணப்பொண்ணு என்ன பண்ணுவா தெரியுமா? அவளோட வீட்டுக்கொல்லைப்புறத்தில இருந்த மருதாணி மரத்துல உள்ள எல்லா இலையையும் உருவிப்போட்டு அம்மியில வெச்சி அரைச்சு கை கால் விரல்ல எல்லாம் சாணி அப்புன மாதிரி அப்பிகிட்டு 'அன்னக்கிளி உன்னத்தேடுது' ன்னு டூயட் பாடிக்கிட்டு தூங்காம விடிய விடிய உக்கார்ந்து கெடக்கும்.

மறுநாள் கல்யாணம்...

விடிஞ்சதும் கல்யாண மண்டபத்துக்கு சொந்தக்காரனுங்க ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுடுவானுங்க.

ரொம்ப தூரத்திலே இருந்து வந்த ஆளுங்க அதது ஒரு மூலையில உட்கார்ந்துகிட்டு தூங்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அந்த நேரத்துல மண்டபத்துக்கு வந்து சேரும் வித்துவானுங்க வாயில நாதஸ்வரத்தை வெச்சி ஊதி, ரெண்டு கையாலயும் தவிலை அடிச்சி தூங்கிகிட்டு இருக்கிற கூட்டத்தையெல்லாம் எழுப்பி விட்ருவாய்ங்க. வாரிச்சுருட்டிகிட்டு எழுந்திருக்கிற சொந்தக்காரனுங்க வாயில வெத்தல சீவல் போட்டுகிட்டு கல்யாணத்தை கவனிக்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய வரவழைச்சி இந்த அய்யரு அவங்க ரெண்டு பேரையும் செக்குமாடு மாதிரி மணமேடையை சுத்தி வரச்சொல்லி டயர்டாக்கிடுவாரு.அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய மணமேடையில உட்கார வைப்பாங்க. அய்யரு எதிரில இருக்கிற அடுப்பை பற்ற வெச்சி காய்ஞ்ச குச்சியெல்லாம் அதுல பொறுக்கிப்போட்டு புகைமூட்டத்தைக் கிளப்பி விடுவாரு.

அடுப்பு அனல் பட்டு வியர்வையில மாப்பிள்ளை பொண்ணோட மேக்கப் எல்லாம் கலைஞ்சி போய் ரெண்டுபேரும் வெயில் நேரத்துல மணல் திட்டுல சிக்குன அகதிகள் மாதிரி ஆயிடுவாங்க.

புகை மூட்டம் கிளம்பி அய்யரோட மூக்குக்குள்ள போயி தும்மலை கௌப்பி விடும். தும்மினா சுத்தி உட்கார்ந்து இருக்கிறவனுங்க கொந்தளிச்சிடுவானுங்கங்கற பதட்டத்துல அய்யரு 'கெட்டி மேளம். கெட்டி மேளம்'ன்னு கத்தி வித்துவான்களை உசுப்பி விட்ருவாரு. வித்துவானுங்களும் தடார் புடார் னு அடிச்சி இன்னும் அதிகமா சத்தத்தை கௌப்புவாய்ங்க. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டு அய்யரு வாய்க்குள்ள லாக் ஆன தும்மலை யாருக்கும் தெரியாம ரிலீஸ் பண்ணி விட்ருவாரு.

மாப்பிள்ளை தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல ஒரு முடிச்சி போடுவான். ஆசையா அடுத்த முடிச்சி போடறதுக்குள்ள சுத்தி நிக்கிற சொந்தக்கார பொம்பளைங்க அவனோட கையிலேயிருந்து தாலியை வெடுக்குன்னு பிடுங்கி அவங்களே மீதி ரெண்டு முடிச்சையும் போட்டுவிட்ருவாங்க.

அந்த உச்சகட்ட நேரத்துல ஃபோட்டோகிராபரு மல்லாக்கப் படுத்துகிட்டும், தலைகீழா தொங்கிகிட்டும் பல ஆங்கிள் ல போட்டோக்கள் எடுத்துத்தள்ளுவான்.

உடனே சுத்தி இருக்கிற ஜனங்கள் எல்லாம் தன்னோட கையில இருக்கிற அரிசியை மாப்பிள்ளை, பொண்ணோட மூஞ்சியில வேகமா தூக்கி எறிஞ்சி ஆசிர்வாதம் பண்ணுவாங்க. தூக்கி எறிஞ்ச அரிசியில முக்கால்வாசி அந்த அய்யரோட உச்சந் தலையில போய் உட்கார்ந்துக்கும்.

ஆசிர்வாதம் பண்ணுன கையோட உடனே எழுந்திருச்சி ஜனங்கள் எல்லாம் பந்தி நடக்கிற இடத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சுடும்.

மாப்பிள்ளையும் பொண்ணும் டயர்டாயி போய் 'உஷ். அப்பாடா' ன்னு மணமேடையில உட்காருவாங்க. அந்த நேரத்துலதான் நண்பனுங்க எல்லாம் அட்டைப்பெட்டி மேல கலர் பேப்பரை சுத்திகிட்டு வந்து 'மச்சி வாழ்த்துக்கள் டா' ன்னு சொல்லி, மாப்பிள்ளை பொண்ணை எழுப்பிவிட்டு, கையில கிப்ட் கொடுத்துட்டு 32 பல்லும் தெரியறமாதிரி சிரிச்சிகிட்டு குரூப் போட்டோ எடுத்துக்குவானுங்க.

கொஞ்சநேரத்துல சொந்தக்காரனுங்க எல்லாம் பந்தியில குந்தி தின்னு முடிச்சிட்டு மொய் எழுதிட்டு சொந்த ஊருக்குக் கௌம்பிடுவானுங்க.

தனியா உட்காரந்து கிடக்கிற பொண்ணு மாப்பிள்ளைக்கு பசியெடுக்க ஆரம்பிச்சிடும். ரெண்டுபேரும் பந்தி நடக்குற இடத்தையே ஏக்கமா அடிக்கடி எட்டிப் பார்த்துகிட்டு உட்கார்ந்து கிடக்கும்.

சாயங்காலம் நாலு மணிக்கு வந்து யாராவது ரெண்டுபேரையும் பந்திக்கு கூட்டிகிட்டுப்போய் மிச்சம் மீதி இருக்கிறதை இலையில வெச்சி சாப்பிட வெப்பாங்க.

அப்புறம் எல்லாரும் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிடுவாய்ங்க.

அப்புறம் கொஞ்சநாளு மாப்பிள்ளையும் பொண்ணும் குஜாலா கூத்தடிச்சி கொண்டாடுவாங்க.

மோகம் முப்பது நாளு. ஆசை அறுபது நாளு. மொத்தம் தொண்ணுறு நாளு கழிச்சி ரெண்டுபேரும் சம்பாதிச்சி குடும்பம் நடத்த திண்டாடுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி குழந்தை குட்டிகள். அப்புறம் அதை வளர்த்து... படிக்க வெச்சி... கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு வரன் தேடி அலைவாங்க..

முதல்ல பொண்ணு பார்க்கிற படலம்...

அய்யய்யோ. தேய்ஞ்சி போன சி.டி மாதிரி திரும்பவும் மொதல்லே இருந்தா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்........

Wednesday, June 24, 2009

32 கேள்விகள்

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னோட பேரு மணிகண்டனுங்க. நேரா பாக்குறப்ப மணிசார் மணிசார்னு மரியாதையா கூப்புடுவாங்க. கொஞ்சம் அப்படி இப்படி நவுந்து போனா 'இந்த மணிப்பய இருக்கானே...அவன்...' ன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எதுக்கு வம்புன்னு எனக்கு நானே மணிப்பயல்னு பேர மாத்தி வெச்சிகிட்டேன்.புடிக்கலன்னா என்ன பண்ண போறீங்க? ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வெச்சி கூப்பிடுவீங்க. எதுக்குங்க வம்பு?


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

பக்கத்து வீட்டுத் தாத்தா செத்துப்போனப்ப கிழவியைக் கட்டிப்புடிச்சி கிட்டு அழுதேன். (அழுதாத்தான் திங்கறதுக்கு பலகாரம் கொடுப்பாங்களாம்ல?). கருமம் அந்த தேதியெல்லாமா ஞாபகம் வெச்சுக்க முடியும்?


3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும். ஆனா என்ன எழுதினேன்னு எழுதினதுக்கப்புறம் எனக்கே புரியாது.


4.பிடித்த மதிய உணவு என்ன?

ஓசியில் கிடைத்தால் பிரியாணி. காசுக்கு சாப்பிட்டால் தயிர்சாதம்.


5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

இந்தக்கேள்விக்கு உண்மையைச்சொன்னா அப்புறம் யாராவது என்னோட நட்பு வெச்சுக்குவாங்களா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதல்ல குளிக்கப் பிடிச்சாத்தானே அப்புறம் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்?.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முன்னப் பின்ன அறிமுகம் இல்லாத ஆளை எதுக்குங்க கவனிக்கனும்?


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

அது தெரிஞ்சிருந்தாதான் வாழ்க்கையில இந்நேரம் நான் உருப்பட்டு இருப்பேனே.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?


எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க. இப்போதைக்கு என்னோட சரிபாதி என்னோட ஆடைகள்தான்( ஏன்னா ஆள் பாதி. ஆடை பாதி இல்லையா?)

துவைச்சி இருந்தா போட்டுக்க பிடிக்கும்.
அழுக்கான அப்புறம் துவைக்கப்பிடிக்காது.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

சொல்ல மாட்டேன். எனக்கு வெக்கம் வெக்கமா வருது.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

புதுசா வாங்குனப்ப வெள்ளைக் கலர்ல இருந்தது. இப்ப என்ன கலர்ல இருக்குன்னு தெரியலையே.(சட்டையை துவைச்சாதான் ஒரிஜினல் கலர் தெரியும் னு சொல்றாங்களே.அப்படியா?)


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?


பக்கத்து வீட்டுக் கிழவி நாராசமாப் பாடிக்கிட்டு இருக்கிற பழைய 'காத்தவராயன்' சினிமாப்பாட்டு.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அது எழுதப்போற பேப்பரோட நிறத்தைப் பொறுத்தது.


14.பிடித்த மணம்?

சம்மணம்.(சும்மா குந்தி கிடக்கத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்).


15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

என்கிட்ட கடன் வாங்கிட்டு குடுக்காம டிமிக்கி குடுத்துகிட்டு இருக்கிற எல்லாப்பயலுங்களையும் அழைக்கப்போறேன். அழைக்கக்காரணமா? தூக்கிப்போட்டு மிதிக்கிறதுக்குத்தான். அவனுங்களை எனக்குப் பிடிக்குதோ இல்லையோ.நான்தான் அவனுங்களை துரத்தி துரத்தி பிடிக்கணும்.


16.பிடித்த விளையாட்டு?

தூங்குற விளையாட்டு

17.கண்ணாடி அணிபவரா?

பைக் ல போறப்ப மட்டும் கருப்பு கண்ணாடி அணிவேன்.


18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எனக்குப்பிடிச்சது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்கள் மட்டும்தான்.


19.கடைசியாகப் பார்த்த படம்?

பர்ஸ்ல இருக்கிற என்னோட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.


20.பிடித்த பருவ காலம் எது?

கோடைக்காலத்துல குளிர்காலம் பிடிக்கும். குளிர்காலத்துல கோடைக்காலம் பிடிக்கும்.


21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் கொட்டாவி விடுறதுக்தே அலுப்பு படுவேன். படத்தை மாற்றினதே இல்லை. ரொம்ப அலுப்பா இருக்குங்க.

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் – இட்லி குக்கர் சத்தம்.
பிடிக்காத சத்தம் – 'இட்லி தீர்ந்துப்போச்சுடா' என்கிற அம்மாவின் சத்தம்.

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கல்லூரியில படிக்கிறப்ப டெல்லி போய்ட்டு வந்தேன். போறப்ப அளக்குறதுக்கு டேப் எடுத்திட்டு போகலையே.அதனால எவ்ளோ தொலைவுன்னு தெரியலங்க.


24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எனக்கு எந்த தனித்திறமையும் கிடையாது. கூட்டுத்திறமையும் கிடையாதுங்க.


25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னோட வலைப்பதிவைப்படிச்சிட்டு உம் முன்னு மூஞ்சியை வெச்சி இருக்கிறதை.


26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது பாட்டுக்கு பேசாம தூங்கி கிட்டு இருக்கு. அதைப்போய் ஏங்க தட்டி எழுப்பறீங்க?


27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மனுசப்பயலுங்க காலடி படாத காடு மலை அத்தனையும்.


28.எப்படி இருக்கணும்னு ஆசை?

'நான் கடவுள்' மாதிரி இருக்கணும்னு ஆசை.


29. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

கல்யாணம்தான்.


30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்வுங்கறது ஒரு வால்வு மாதிரிங்க. தொறந்து இருந்தா வாழலாம். அடைச்சிகிட்டா போய் சேர வேண்டியதுதான்.


31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


http://vidhoosh.blogspot.com/

எனக்கு அவங்க வலைப்பதிவிலேயே மிகவும் பிடிச்சது 'பக்கோடா பேப்பர்கள்....' ங்கற வலைப்பதிவோட தலைப்புல முதல் பாதிதான்.
(திங்கற சமாச்சாரமாச்சே.அதான். ஹி. ஹி).


32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?

'போலி சாமியார் ஆவது எப்படி?' ங்கற புத்தகம்.
(சீக்கிரமா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான்.)