Wednesday, December 21, 2016

சாணிக்கு சண்டை











தமிழகம் முழுவதும் ஒரு மூத்திர சந்து கூட விடாமல் அதிமுக நிர்வாகிகளால் வைக்கப்பட்டு இருக்கும் பேனர்கள் மற்றும் ஒட்டப்பட்டுள்ள சின்னம்மா படங்களின் மீது சாணத்தை வீசி அடிக்க ஆத்திரத்துடன் திரியும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களால் தமிழ்நாடு முழுவதும் மாட்டுச்சாணத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 

சாண அபிசேகத்திற்காக ஆங்காங்கே தெருக்களில் சிதறிக் கிடக்கும் மாட்டுச் சாணத்தை தொண்டர்கள் அகலமான பாத்திரங்களில் அள்ளிச் சென்று விடுகின்றனர்

இந்த சாண அபிசேகம் பிரச்சினையால் சாணத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டு மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் தெளிக்க போதிய அளவு சாணம் கிடைக்காமல் குடும்பப் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மாடுகள் உண்பதற்கு வைக்கோல் கிடைக்காததால் வால்   போஸ்டர்களையே தின்று உயிர் வாழ்கின்றன. எனவே அவை போடும் சாணங்களில் பசைத்தன்மை குறைந்தே காணப்படுகிறது.




இதனால் சின்னம்மா போஸ்டர் மீது ஒரு தடவைக்கு நான்கு தடவையாக அடித்தால்தான் பசக் கென்று மூஞ்சியின் மீது ஒட்டுகிறது. 

இதனால் கை வலியால் களைப்படைந்து விடும் உண்மை தொண்டர்கள் தரமான ஒரிசினல் சாணம் வாங்குவற்காக கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில மாட்டுச்சாண வியாபாரிகள் மாட்டுச்சாணத்துடன் மனிதன் உள்ளிட்ட இன்னபிற விலங்குகளின் சாணத்தை கலப்படம் செய்து விற்று நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். 

இதனால் இந்த புதுவகையான சாணங்கள் அடிக்கப்ட்ட பேனர்கள் அருகில் நடந்து செல்ல நேரிடும் பொதுமக்கள் ஒரு வித வித்தியாசமான துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு மூக்கைப் பொத்தியபடி அதை கடந்து செல்கின்றர்.

எனவே சாணம் அடிக்கப்பட்ட சின்னம்மா பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அருகில் பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என பொதுநலன் கருதி எச்சரிக்கப் படுகிறது.

...