Thursday, October 20, 2011

பலன் தரும் பாட்டி வைத்தியம் -2






50 கிராம் வெள்ளைப்பூண்டு மற்றும் இஞ்சி 50 கிராம் எடுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் பெரிய வெங்காயம் 25 கிராம், சிறிய வெங்காயம் 10 கிராம் சேர்த்து மிக்சியில் மாவுபோல அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து வாயில் போட்டு சிறிது நேரம் குதப்பிவிட்டு அப்படியே முழுங்கிவிடவும்.அத்துடன் சிறிது வேப்பெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி தலைமுடி மற்றும் கை,கால்களில் தடவிக்கொண்டு சென்றால்....



எவ்வளவு கூட்டத்திலும் நீங்கள் நசுங்காமல் தாராளமாக பயணம் செய்யலாம்.



.....

பலன் தரும் பாட்டி வைத்தியம் - 1



100 மில்லி லிட்டர் வேப்பெண்ணெயை வாணலியில் இட்டு சூடுபடுத்தி,கொதிநிலைக்கு வந்தவுடன் அத்துடன் 50 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் சூடுபடுத்தி அத்துடன் சிறிது பெருங்காயப் பவுடர் லேசாக தூவி வாணலியை இறக்கி வைத்து ஆற வைக்கவும்.இரவு உறங்குவதற்கு முன் வாணலியிலிருந்து இந்த கலவையை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டால்..........


கொசு கடிக்காதுங்க!

.....