Thursday, January 11, 2007

காதல் கவிதைகள்

எழுதியவர் புகழ் பெற்ற* கவிஞர் குசும்பு குண்டுமணி
*(இவருக்கு புகழேந்தி என்ற மகன் உள்ளான். மற்றபடி இவரை பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாது)

பொங்கல் பரிசு

போன மாதம் செய்த பொங்கலை
பொட்டலமாய் கட்டி வந்து-
உனக்காக நானே சுடச்சுட செய்தது என்று-
தின்னச் சொன்னாள் என் கையில் தந்து.
தின்னவுடன்—-
பட்டாசு சத்தம்தான்
வயிற்றுக்குள் கேட்குதடி.
போனேன் நொந்து.
கக்கூசு கட்டணத்தில்
கடனாளியானேனே-
காலரா வந்து.

பஜ்ஜி - குச்சி

குவளை நிறைய இட்லியை-அவள்
தொட்டுத் தின்றாள்
சட்டினியில்.

அவளை எண்ணி சாப்பிடாமல்
உடல் மெலிந்தேன் - நான்
பட்டினியில்.

தின்று தின்று உப்பினாளே -அவள்
எண்ணையில் நனைந்த பஜ்ஜி போல.

வேதனையில் நான் இளைத்தேன்
வெயிலில் காய்ந்த குச்சி போல.

காரு - சோறு

கனவினிலே வாங்கி வந்தேன்-
காதலிக்காக ஒரு ஏசி காரு.

கண்விழித்துச் சாப்பிட்டேன்-
குண்டானில் பழைய சோறு.