Wednesday, July 1, 2009

இன்றைய செய்திகள் (01-07-2009)

செய்தி 1:

நிஜம்:

'இலங்கைத் தமிழரைக் காப்பாற்று!' என சட்டசபையில் அ.தி.மு.க ச.ம.உ க்கள் கோஷமிட்டதால் வெளியேற்றப்பட்டனர்.

நிழல் :

'போர் நடந்தால் அப்பாவிப் பொதுமக்கள் சாவது சகஜம்தான்' என்று சகஜமாக அறிக்கை விட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசுக்கு 'பக்கபலமாக' இருந்த ஜெயலலிதாவை அவரது கட்சி ச.ம.உ க்கள் இவ்வாறு கோஷமிட்டு அவமானப் படுத்தி விட்டதாக காங்கிரஸ் ச.ம.உ க்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.



செய்தி 2:

நிஜம்:

மும்பை பாந்த்ரா – ஓர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப் பாலத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார்.

நிழல் :

இனி வரும் காலங்களில் கடல் வழியாக ஊடுறும் போது, அந்தப்பாலத்தினை பயன்படுத்துவது பற்றி பரசீலிக்கப்படும் என பாகிஸ்தான் தீவிரவாதிகள் அறிவித்தனர்.



செய்தி 3:

நிஜம் :

போலீசாருக்கு வருமானம் தரும் இடங்களாக சிறைச்சாலைகள் இருக்கின்றன என்று அ.தி.முக ச.ம.உ எஸ்.வி.சேகர் சட்டசபையில் கூறினார்.

நிழல் :

இது பற்றி கருத்து தெரிவித்த காவல்துறை உயரதிகாரி ஒருவர், எஸ்.வி.சேகர் குறுகிய கண்ணோட்டத்துடன் இக்கருத்தினை கூறியுள்ளதாகவும், உண்மையில் அனைத்து இடங்களுமே தங்களுக்கு வருமானம் தரும் இடங்கள்தான் என்றும் தெரிவித்தார்.



செய்தி 5:

நிஜம் :

தற்போது இந்திய வெளியுறவு செயலாளராக பதவி வகித்து வரும் சிவசங்கர் மேனனின் பதவி காலம் வருகிற 31 – ஆம் முடிவடைவதால், புதிய வெளியுறவு செயலாளராக நிருபமா ராவ் நியமிக்கப் பட்டுள்ளார்.

நிழல் :

இது பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சிவசங்கர் மேனன் தனது பதவிக்காலத்திலேயே இலங்கையில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப்பேரின் வாழ்க்கைப் பிரச்சினையை 'முடித்து' விட்ட மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.



செய்தி 6:

நிஜம் :

இந்தியாவின் முக்கிய நகரங்களில் மாநகர போலீசாருக்கு ஹெலிகாப்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நிழல் :

போலீசார் இனி விரைவாக மாமுல் வசூல் செய்ய வசதியாகவே இந்த வசதி செய்துதரப்பட இருப்பதாக அவர் மேலும் கூறினார்.


.

2 comments:

  1. கலக்கல்..

    தொடரட்டும் உமது சேவை..

    வாழ்த்துகள்.

    ReplyDelete