நங்கநல்லூர்!
சென்னை என்ற பரந்து விரிந்த பாலைவனத்தில் ஓர் அதிசய அமைதிப்பூங்கா.
மொட்டைமாடியில் நின்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் தென்னை மரங்களின் பசுமை.
விடியற்காலையில் கேட்கும் பூஜை மணியோசைகள்.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளிவரும் சாம்பிராணி புகை மண்டலத்தில் கரைந்துபோகும் மனதின் அழுத்தங்கள்.
மாலை நேரங்களில் கேட்கும் மனதை மயக்கும் சங்கீத கீர்த்தனைகள்.
நேர்த்தியான சாலைகளில் நிதானமாக பயணிக்கும் வாகனங்கள்.
வறுமையின் எச்சத்தினைக்கூட காணாத வளம் மிக்க மனிதர்கள்.
32 அடி உயர ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயம், நங்கநல்லூரின் அடையாளச்சின்னம்.
தென்னைமர உயர ஆஞ்சநேயரை தரிசிக்க வரும் பக்தர்கள் பலர்; தொன்னையில் வைத்துக் கொடுக்கப்படும் சுவையான பிரசாதத்திற்காக வரும் பக்தர்கள் சிலர் என்று எப்போதும் கூட்டத்தினால் நிரம்பி வழியும் அந்த ஆலயம்.
கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளுமே அந்த ஊரில் குடிகொண்டுள்ளன.
நள்ளிரவின் அமைதியில் தெருக்களில் அச்சமின்றி நடைபயிலும் தம்பதிகளை அங்கே காண முடியும்.
இத்தனையும் மீறி,
'என் பையன் அமெரிக்காவிலே சாப்ட்வேர் இஞ்சினியரா ஒர்க் பண்றான். கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கேயே செட்டில் ஆயிட்டான். மாசா மாசம் எங்க செலவுக்கு பணம் அனுப்பிடுவான். தினமும் சாட்டிங்ல என் பேரப்பிள்ளை கிட்ட பேசினாத்தான் எனக்கு தூக்கமே வரும்'
என்று பெருமையாகச் சொல்லும் சில வயதான பெற்றோரின் தனிமை வாழ்க்கை என் மனதை நெருடுகிறது.
.
என் பெற்றோரும் அங்கே தான் மணி. :(
ReplyDeleteஎன் பிறந்தகத்தை நினைவூட்டி விட்டீர்கள்
yes Nanganallur is a great place. But as u said 95% of parents children are in US UK, thats the reality and fact.
ReplyDeleteHi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நங்கநல்லூர் பற்றி நானும் பதிவு இட்டுள்ளேன், பார்க்க http://dondu.blogspot.com/2008/04/1969-2008.html
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்