Wednesday, December 21, 2016

சாணிக்கு சண்டை











தமிழகம் முழுவதும் ஒரு மூத்திர சந்து கூட விடாமல் அதிமுக நிர்வாகிகளால் வைக்கப்பட்டு இருக்கும் பேனர்கள் மற்றும் ஒட்டப்பட்டுள்ள சின்னம்மா படங்களின் மீது சாணத்தை வீசி அடிக்க ஆத்திரத்துடன் திரியும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களால் தமிழ்நாடு முழுவதும் மாட்டுச்சாணத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 

சாண அபிசேகத்திற்காக ஆங்காங்கே தெருக்களில் சிதறிக் கிடக்கும் மாட்டுச் சாணத்தை தொண்டர்கள் அகலமான பாத்திரங்களில் அள்ளிச் சென்று விடுகின்றனர்

இந்த சாண அபிசேகம் பிரச்சினையால் சாணத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டு மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் தெளிக்க போதிய அளவு சாணம் கிடைக்காமல் குடும்பப் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மாடுகள் உண்பதற்கு வைக்கோல் கிடைக்காததால் வால்   போஸ்டர்களையே தின்று உயிர் வாழ்கின்றன. எனவே அவை போடும் சாணங்களில் பசைத்தன்மை குறைந்தே காணப்படுகிறது.




இதனால் சின்னம்மா போஸ்டர் மீது ஒரு தடவைக்கு நான்கு தடவையாக அடித்தால்தான் பசக் கென்று மூஞ்சியின் மீது ஒட்டுகிறது. 

இதனால் கை வலியால் களைப்படைந்து விடும் உண்மை தொண்டர்கள் தரமான ஒரிசினல் சாணம் வாங்குவற்காக கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில மாட்டுச்சாண வியாபாரிகள் மாட்டுச்சாணத்துடன் மனிதன் உள்ளிட்ட இன்னபிற விலங்குகளின் சாணத்தை கலப்படம் செய்து விற்று நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். 

இதனால் இந்த புதுவகையான சாணங்கள் அடிக்கப்ட்ட பேனர்கள் அருகில் நடந்து செல்ல நேரிடும் பொதுமக்கள் ஒரு வித வித்தியாசமான துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு மூக்கைப் பொத்தியபடி அதை கடந்து செல்கின்றர்.

எனவே சாணம் அடிக்கப்பட்ட சின்னம்மா பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அருகில் பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என பொதுநலன் கருதி எச்சரிக்கப் படுகிறது.

...

Friday, July 15, 2016

பிரிண்டர்களை கண்காணிக்கும் மென்பொருள்...TO COUNT PRINT OUTS!



  • ஒரு சில பிரிண்டர்கள் மற்றும் காப்பியர்களில் எத்தனை பிரிண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் பெரும்பாலான பிரிண்டர்களில் இந்த வசதி கிடையாது.
  • அதனால்..
  • அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக பிரிண்டர்களைப் பயன்படுத்துவதை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.

  • இதனால் பிரிண்டர்களில் டோனர் மற்றும் இங்க் சீக்கிரம் தீர்ந்து விடும்.பிரிண்டரும் சீக்கிரம் பழுதடைந்து விடும்.

  • சாதாரண பிரிண்டர்களில் இந்த வசதி இல்லா விட்டாலும்  ஒரு சில மென்பொருட்களைப் பயன்படுத்தி நாம்  இந்த வசதியைப் பெறலாம்.

  •  எப்படி?

  • பிரிண்டர் இணைக்கப்ட்டுள்ள கணினியில் கீழ்கண்ட மென்பொருளை தரவிறக்கம் செய்து  Install  செய்ய வேண்டும்.
  • lhttp://www.papercut.com/download/?http=https%3A%2F%2Fcdn.papercut.com%2Ffiles%2Fprint-logger%2Fcurrent%2Fpapercut-print-logger.exe

  • இந்த மென்பொருள் உதவியுடன் கீழ்க்கண்ட தகவலை நாம் பெற முடியும்.

  • 1. பிரிண்ட் எடுக்கபட்ட நேரம்.
  • 2. பிரிண்ட் யாரால் எடுக்கப்பட்டது?
  • 3. மொத்தம் எத்தனை பக்கங்கள் பிரிண்ட் எடுக்கப்பட்டது?

  • என்பது போன்ற மேலும் பல தகவல்கள் நாள் மற்றும் மாதம் வாரியாக ஒரு Excel File  ல் தொடரந்து சேமிக்கபடும்.


  • TO COUNT HOW MANY PAGES PRINTED IN YOUR LOCAL PRINTER....

THIS SOFTWARE IS USED TO GET DETAILS ABOUT:

  • 1. the time of print,
  • 2. the name of the user who printed,
  • 3. the total number of pages,
  • 4. document names and titles,
  • 5. other print job attributes such as paper size, color mode and more.
Print audit logs are available in a viewer friendly HTML format, or in CSV or Excel format.

....