Monday, July 15, 2013

கவிதை

குறிப்பேட்டின் அடித் தாள் எடுத்தாள்.

எடுத்து....

அவனது பெயர்

எழுதியெழுதி அடித்தாள்!

பேணாமை காரணமாய்

பேனா மை உலர்ந்திருக்க...

பென்சிலை எடுத்து எழுதினாள் அப்-

பெண் சிலை!

கவிதை

விடுமுறை தனக்கும்

விடும் முறை வேண்டுமென...

விண் அப்பம் போன்ற நிலவும்

விண்ணப்பம் செய்திருந்த

அம்மாவசை இரவொன்றில்

அம்மா வசை பாடுவாள் என

நம்பிக் கை பற்றியவள்

நம்பிக்கை வற்றியவளாய்

நழுவிச் சென்றாள்!