சுண்டுவுக்கு பிடிக்காத பலகாரம் என்றால் பக்கத்தில் இருப்பவருக்கு அதை பாசமாக ஊட்டி விடுவாள்.
ஆனால் பிடித்த பலகாரம் என்றால்...........
அம்மா மண்டு பணியாரம் சுட்டு அதில் நான்கைந்து எடுத்து தட்டில் வைத்து சுண்டுவிடம் கொடுத்தாள்.
"பாப்பா! இதை தாத்தா கிட்ட கொடுத்துட்டு வா. அப்புறம் நீ சாப்பிடலாம்'"
தட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் சுண்டு.
அங்கே வாசலில் நின்றுகொண்டு செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார் தாத்தா.பணியாரம் வாசனை அவரது நாசியில் புகுந்து நாக்கில் எச்சிலை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.
திரும்பிப் பார்த்தார்.
சுண்டு பணியாரத் தட்டுடன் நின்றுகொண்டிருந்தாள்.
"தாத்தா! உனக்கு பணியாரம் புடிக்காதா? ஏன் தாத்தா? சுகர் இருக்குன்னு சாப்பிட மாட்டியா? சரி சரி நானே தின்னுக்கிறேன்"
என்று சொல்லிவிட்டு....
தாத்தா வாயில் ஊறிய சலுவாய் வழிந்து தரையை நனைத்துக் கொண்டிருந்தது.
.......
No comments:
Post a Comment