குண்டு சன்னல் வழியே எட்டிப்பார்த்தான்.
அவனுக்கு கடன் கொடுத்த கைலாசம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
உடனே சுண்டுவை அழைத்து, தான் வீட்டில் இல்லை என கைலாசத்திடம் சொல்ல சொல்லிவிட்டு ஒரு அறையில் ஒளிந்து கொண்டான்.
சுண்டு வீட்டு வாசலுக்கு வந்தாள்.
"பாப்பா! அப்பாவை கூப்பிடும்மா"
"அப்பா வீட்ல இல்ல. வெளியில போயிருக்காங்க."
"எப்பம்மா வருவாரு?"
"அதெல்லாம் என்கிட்ட சொல்லல. 'அந்த கடன்கார நாயி கைலாசத்துகிட்ட அப்பா வீட்ல இல்லன்னு சொல்லு' ன்னு மட்டும் தான் சொன்னாரு அப்பா. இருங்க கேட்டு சொல்றேன்"
என்று ....
என்று ....
குண்டு ஒளிந்திருந்த அறையை நோக்கி,
" அப்பா நீங்க எப்ப வீட்டுக்கு வருவீங்கன்னு கேட்கறாங்க இந்த மாமா. என்ன சொல்லணும்?"
என்று கேட்டு,..
கடன் காரன் கைலாசத்தின் கையில் குண்டுவின் காதை ஒப்படைத்தாள் சுண்டு.
...
...
No comments:
Post a Comment