குண்டோதரன் அதாவது குண்டுவுக்கும், மண்டோதரி அதாவது மண்டுவுக்கும் பிறந்த 3 வயது சுட்டிப்பெண் சுண்டு.
சுண்டுவின் லூட்டிகளை கண்டு பல் விழுந்த பாட்டிகளும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் என்பதற்காக இந்த தொடர்.......
.......................
லூட்டி-1
இரவு 12 மணி.
முகத்தில் ஓங்கி அடி விழுந்தது குண்டோதரனுக்கு.
வாரிச்சுருட்டி எழுந்தான்.
சுண்டு நின்று கொண்டிருந்தாள்.
"அப்பா! எனக்கு இப்பவே பந்து வாங்கிக் குடுங்க. நான் விளையாடணும்"
"இப்ப ஒரு கடையும் இருக்காதும்மா. எல்லாம் கடையச் சாத்திட்டு தூங்கப் போயிட்டாங்க."
"எனக்கு இப்பவே வேணும் ஙேஙே..........." என்று அழ ஆரம்பித்தாள்.
மண்டு எழுந்து,
"ஏங்க! உங்க செல்போன்லதான் பந்து விளையாடற மாதிரி கேம் இருக்கே. அதை எடுத்துக் குடுங்க " என்றாள்.
குண்டுவும் பந்து விளையாட்டை செல்போனில் காண்பித்து,
"இந்தா செல்லம்! பந்து விளையாடு" என்று கொடுத்தான்.
"இதை எப்படி விளையாடணும் தெரியுமா உனக்கு?" என்று கேட்டான் குண்டு.
"எனக்கு நல்லாத் தெரியும். இப்ப பாருங்க எப்படி விளையாடறேன்னு" என்று சொல்லிவிட்டு ,..............
செல்போனை 'சுட்டேர்' என்று சுவற்றில் அடித்தாள்.
....
No comments:
Post a Comment