Wednesday, June 17, 2009

கிழமொழிகளும் மணிப்பயலின் மறுமொழிகளும்

•ஆற்றுல போட்டாலும் அளந்து போடு

சட்டையை இன் பண்ணினா மறக்காம ஜிப்பு போடு.


•ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

ஏட்டு வாங்கிய மாமுல் வீட்டுக்கு உதவாது.(நேரா பிரியாணி கடைக்குத்தானே போவாரு.)


•ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.

ஆபரேட் பண்ண தெரியாதவன் கம்ப்யூட்டர்ல வைரஸ் னு சொன்னானாம்.


•குரைக்கிற நாய் கடிக்காது

கடிக்கிற நாய் குறைக்காது.(வாயால கவ்விகிட்டு இருக்கறப்ப எப்படிய்யா குரைக்க முடியும்?)



•இடுக்கண் வருங்கால் நகுக

கடன்காரன் வந்தால் ஓடுக.


•ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

வீடு ரெண்டு பட்டால் வக்கீலுக்குக் கொண்டாட்டம்.


•காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

A.T.M க்குள்ள நிற்கும்போதே ஏ.சி காற்று வாங்கிக்கொள்.


•ஆழமறியாமல் காலை விடாதே.

ஓசியிலே கொடுக்கிறானேன்னு Credit Card வாங்காதே.


•குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர்.

மாத சம்பளம் ஆயிரத்து அய்நூறு. டூர் போக நினைச்சானாம் சிங்கப்பூரு.


அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

Missed Call ஐ Dial பண்ணிப்பார்த்தால் அத்தனையும் Wrong Call.


ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆம்பள கறுத்தால் கிடைக்காது பெண்.


கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

ஜலதோசம் பிடித்தவனுக்குத் தெரியுமா கூவம் வாசனை?

No comments:

Post a Comment