Friday, June 12, 2009

கவிதைகள்

ராசிக்கல்

கோடீஸ்வரன் ஆக ஆசைப்பட்டு

அணிந்துகொண்டேன் ராசிக்கல்லை. - இப்போது

கோடம்பாக்கம் ஓட்டலிலே

கழுவுகின்றேன் தோசைக்கல்லை.


வாஸ்து

வாஸ்து பார்த்து வீடு கட்டி

வாசலிலே பந்தல் வெச்சேன்.

தோஸ்து ஒருத்தன் ஏமாற்றி

நடுத்தெருவில் குந்த வெச்சான்.


காத்திருந்து காத்திருந்து....

உனக்காக காத்திருந்தேன்

சுங்குவார் சத்திரத்தில்...

பலநாளாக!


உங்கப்பன் என்னைப் பிடித்து

தொங்கவிட்டான் உத்திரத்தில்...

தலைகீழாக!



கல்லூரிக் காதல்

உன் கூந்தல் மேகம் கண்டு

ஆடும் மயிலானேன்.

உனது வீட்டுத்தோட்டத்தில்

கூவும் குயிலானேன்.

உனையே நினைத்து படிக்காமல்

பரிட்சையிலே பெயிலானேன்.

1 comment: