Thursday, June 4, 2009
போளிச்சாமியார் மணிப்பயல் சுவாமிகளும் போலிச்சீடர்களும்
மணிப்பயல் சுவாமிகள் தன்னைக்காண வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக போளி கொடுப்பது வழக்கம். தேம்பி அழும் பக்தர்களுக்கு தேங்காய் போளியை வாயில் திணித்து தேற்றி விடுவார். பணக்கட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கு பருப்பு போளியை பொட்டலம் போட்டு பாசமுடன் அளிப்பார். வெறுங்கையுடன் வரும் வெட்டிப்பக்தர்களின் வாயில் விபுதியை அள்ளித் தெளிப்பார்.
அதன் காரணமாக அவரிடம் போளி வாங்கி தின்று ருசி கண்ட பக்தகோடிகளால் போளிச்சாமியார் என்ற பெயரில் அன்புடன் அழைக்கப்பட்டார்.
போளிச்சாமியார் மணிப்பயல் சுவாமிகள் நீண்ட தாடியுடனும் சாமியார்களின் பொதுவான யூனிஃபார்ம் ஆன காவி உடையுடனும் கையில் கமண்டலத்துடனும் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
கமண்டலத்தில் இருக்கும் பொருளானது கால நிலைக்கேற்ப மாறுபடும். அதாவது குளிர் மற்றும் மழைக்காலங்களில் சூடான காபியும் கோடைக்காலத்தில் குளிர்பானங்களும் அதில் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது சிறிது வாயில் கவிழ்த்துக்கொண்டு தாகசாந்தி அடைவார்.
அவ்வப்போது அவர் தரும் போளிகளுக்காகவும் கமண்டலத்தில் இருக்கும் காபிக்காகவும் அடிமையான சிலர் அவருக்கு சீடர்களாக மாறி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கியிருந்து அவருக்கு பணிவிடைகள் செய்து காலம் தள்ளினர்.
……தொடரும்……
Subscribe to:
Post Comments (Atom)
-
சாதாரணமாக ஒரு புத்தகம் (Book) என்பது பல்வேறு பக்கங்களின் (Pages) தொகுப்பு ஆகும். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துக்கள் (Texts) ம...
-
வெப் செர்வர் என்பது ஒரு Application அல்லது ஒரு Software ஆகும். ( ஆனால் சில சமயங்களில் வெப்செர்வர் Application பயன்படுத்தப்ப...
-
(அமரர் கல்கி எழுதிய சிறுகதைகள் சிலவற்றை படித்தவுடன் நானும் சிறுகதை எழுதிப்பார்த்துவிடுவது என முடிவு செய்து பேனாவை எடுத்து தாளில் கிறுக்க ஆ...
-
ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் சொந்த இணையதளத்தை உலகம் முழுவதும் பார்வையிட செய்யலாம்! எப்படி? முதலில் இணையம் அதாவது Internet எப்பட...
-
ஒரு கணிப்பொறியில் ஆபாச இணையதளங்களை பார்வையிட முடியாதவாறு எளிதாக தடை செய்யலாம். Preferred DNS Server மற்றும் Alternate DNS Server ...
No comments:
Post a Comment